திருமால் திருப்புகழ்…. (47)
கிரேசி மோகன்
தன்னாதன தான தானான தன்னாதன தான தானான
தன்னாதன தான தானான -தனதான….
——————————————————————————-
முன்நூல்புரி வேதன், மாலோலன், கண்ணால்முடி பாதம் காணாத,
அண்ணாமலை ஈசன் நாலாவ -துகுமாரன்
தன்ஆர்வவி சாரம் நானாரை என்னாலெளி தாக ,தேரேறி
அந்நாளில்விஜ யோன்வில் போராட -தெளிகீதை,
சொன்னோய்அது போலென் காதோரம்,அம்மாபொருள் ஓதி நாயேனை,
சும்மாயிரு நாதர் போலாக,-அருள்வாயே.
விண்ணோர்மகிழ் வாக சூர்மாய, அன்னார்மகள் ஆனை,ஆலோல
பெண்ணோ(டு)அலை வாயில் வேலோடு-மயிலேறி,
நின்னோனுமை பாலன், ஈராறு கண்ணான்,படை ஆறன், தீவீசு
கண்ணார்மகன், சேவல் தோளோனின் -முறைமாம.
முன்னாள்இலை ஆலில் ஈரேழை, உண்ணோய்உமிழ் வாயோய், பேரூழி
கண்ணாகுரு வாயூர் கீதாசி -ரியபாலா,
பெண்ணாறலை வீசும் காவேரி தன்னால்வளர் சோலை பூவாசம்
முன்னேவரும் சோழ மாகாணம் -அதில்மேயும்,
உண்ணாமுலை மாதர் சீராட அம்மாயென ஓடும் சேயாகும்,
மன்னார்குடி ராஜ கோபால -பெருமாளே….
————————————————————————————————————
படங்களுக்கு நன்றி