பத்மநாபபுரம் அரவிந்தன்images

நட்சத்திரங்கள் பிடித்து
நெற்றிப் பொட்டு வைப்பேனென்று
சொல்ல மாட்டேன்
பக்கத்துக் கடையில்
ஒட்டுப் பொட்டு வாங்கித் தருவேன்
வானவில் கசக்கி உன்
கூந்தலில் சூடேன்
ஒரு முழம் மல்லி தினமும் தருவேன்
நிலவு வதனம் உனக்கென
வர்ணிக்க மாட்டேன்..
தினமும் கண்ணாடி நீயே பார்க்கிறாய்
மேகத்தைப் போர்வையாக்கி
அதனுள் கூடுவோமெனப்
புழுகுரைக்க மாட்டேன்
கோரைப் பாயில் நானேயுன்னை
குளிராமல்  போர்த்துகிறேன்..
இவையெல்லாம் சம்மதமெனில்
தொடர் உன் காதலை என்னுடன்..

http://www.metawallpapers.com/lovers-on-the-grass-desktop-wallpaper/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *