சி. ஜெயபாரதன்image

காலமே கடவுளின் கடிவாளக்
குதிரை !
கண்ணுக்குத் தெரியா தோடும்
விண்வெளிக் குதிரை !
முடிவும் முதலு மற்ற
வடிவிலாக் குதிரை !
ஓயாது ! சாயாது ! ஓடாமல்
உறங்காது !
முற்காலம், பிற்காலம், தற்காலம்
கொண்ட
கற்காலக் குதிரை !
முன்னே பாயும் ! பின்னே பாராது !
நேராகச் செல்லும் !
பாதை மாறாது ! பயணம் கோணாது !
வேகம் மாறாது !
விந்தை தீராது ! புதிர் தேராது !
திசை மாறிப் போயினும்
விசை மாறாது !
விண்வெளியில் பல்கோடி
ஒளிமந்தையை இழுத்துச் செல்லும்
கருங்குதிரை !
காலத்தை நிறுத்தி வைக்கக்
கடவுளுக்கும்
முடிய வில்லை !
காலத்தின் மூச்சு நின்றால்
ஞாலமும் சுழலாது !
ஆதி முதல் தோன்றி
ஊதி உப்பிடும்
காலவெளிப் பலூனும் சப்பி
வேலி யற்றுப் போகும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *