திருமால் திருப்புகழ் (59)
கிரேசி மோகன்
மாம்பலம் கோதண்ட ராமர்….
———————————————————
தான்தன தானந்த தான தான்தன தானந்த தான
தான்தன தானந்த தான -தனதான….
————————————————————-
”பாண்டியன் ஊர்வந்த போது, மாண்டது யாரென்ற கேள்வி
தூண்டிடும் நானந்த மூலம் -தனைநாடி,
பாம்பணை சாய்கின்ற மாலன் பூந்தவ நூலுந்தி நாதன்
சேர்ந்தறி யாசம்பு சோணை-மலையேறி
வேண்டுதல் வீணென்ற மோன வேங்கட ராமன்சு பாவ
சாம்பசி வானந்தம் காண-அருள்வாயே
பாண்டவர் போர்வென்று பூமி ஆண்டிட தேர்நின்று கீதை
காண்டிபர் காதன்று கூவும் -நவநீதா
தோண்டிய போதன்று வேலை ,மூண்டெழு ஆலங்கொள் ஈசர்
தீண்டிடும் மாதங்கி மீனாள் -அபிராமி
சாம்பவி யாள்சம்பு பாக னாங்கிச தாலிங்க னோடு
தாந்த்ரிக மாய்நின்ற காளி -முதியோனே.
காண்டமு லாசுந்த ரேசர், தாங்கத சாகண்டன் சாய,
சோம்பலி லாதம்பி யோடு -வனமேகும்,
கோன்ஜன கானந்த சீதை ஆம்படை யானென்று வாழும்,
மாம்பலம் கோதண்ட ராம -பெருமாளே
———————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://www.dinamani.com/religion/2014/01/21/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0/article2012318.ece