கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்ணன் திருப்புகழ்….
——————————————-
’’கண்ணனை நெஞ்சே கருது’’
————————————————

 

Madhuradhipathy - oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness.  கேஷவ்
Madhuradhipathy – oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness.
கேஷவ்

கனவு, தனைமறந்து கண்மூடும் தூக்கம்,

நனவிவை, மூன்றிலும் நான்யார், -வினவிட,
எண்ணவலை ஓய்ந்து, எழுந்திடும் பாற்கடல்
கண்ணனை நெஞ்சே கருது….

பாட்டிசைத்தக் கம்பனைக், கேட்டிசைந்து கொக்கரித்த
மேட்ட ழகியசிங்கன் மாலோலன், -சேட்டையாய்
பின்அணங்கு கள்சேலைப் பொய்கை பறித்தவன்,
கண்ணனை நெஞ்சே கருது….

கடல்கடைந்த போதாமை காயம் எடுத்து,
வடவரையைத் தாங்கும் வரதன், -இடையனை,
அண்ணனுடன் சேர்ந்தாயர் ஆநிரை மேய்த்தவனைக்,
கண்ணனை நெஞ்சே கருது….

நாடாய் விரக்தியை, கூடாய்வை ராக்கியத்தை,
தேடாய் தெளிவான்ம தத்துவத்தை, -வாடாய்நீ,
விண்ணகர் வைகுந்த வாய்ப்புண்டு, வேய்ங்குழல்
கண்ணனை நெஞ்சே கருது….

கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்,
நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து, -மோஹமாய்,
பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட,
கண்ணனை நெஞ்சே கருது

———————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *