விசாலம்

வால்மீகி இராமயணைத்தை பின் பற்றி ஆனால் அதில் தனது சொந்தக்கற்பனைகளையும் சேர்த்து மிகவும் அழகாக மராட்டி மொழியில் ‘பாவார்த்த இராமாயணம்’ என்னும் காவியத்தைப்படைத்தவர் அருள்கவி ஏகநாதர்.மராட்டி மொழியில் பலர் பல இராமயணங்களை எழுதியிருக்கின்றனர்.ஆனால் எல்லாவற்றையும் விட இது மிகப்பழமையான ஒன்று.அவர் பிறந்த இடம் பிரதிஷ்டானம் என்ற சிறு கிராமம்.

anumar
சிறு வயதிலிருந்தே தன் தந்தையை இழந்த காரணத்தினால் தன் தாத்தா வீட்டில் வளர்ந்தவர் ஏகநாதர்.அப்போதிலிருந்தே சம்ஸ்கிருத மொழியைக்கற்று அதில் தேர்ச்சியும் பெற்றார். தவிர மராட்டி ஹிந்தி மொழிகளிலும் வல்லமை பெற்று பல கவிதைகளையும் இயற்றினார்.இவர் ‘ருக்மிணி சுயம்வரம்’ எழுதியதிலிருந்து சில ஜன்மாஷ்டமியின் போது பாடப்படுகிறது ஏகநாதரின் காலம் 1958லிருந்து 1609 வரை .கோதாவரி கரையில் அலைகளோடு பேசி அதன் அழகை ரசித்து அப்படியே கற்பனை உலகுக்குப்போய்விடுவார். இவருடைய காவியங்களில் அடுக்கு மொழிகள். அணி அணியான சொற்கள் மிருதங்க லயம் போல் நடைப்போடும் .அவருடைய கற்பனைக்கு இராமயணைத்திலிருந்து ஒரு உதாரணம்.இராமயணத்தில் ஸ்ரீ அனுமான் ராமதூதனாக இலங்கைக்குச்செல்கிறார். ஆனால் ஏக நாதர் ஹனுமான் மட்டும் அனுப்பினது அல்லாமல் அங்கதனையும் இராவணனுக்கு முன்னால் நிறுத்துகிறார். அங்கதன் பேசுகிறான்

“என் பெயர் அங்கதன் நான் ஸ்ரீ ராம தூதனாக வந்திருக்கிறேன்.”

“என்னடா பேசுகிறாய்?நீயும் ஒரு தூதனா? முதலில் ஒரு குரங்கு வந்தாயிற்று.இப்போது இரண்டாவது குரங்கா?”

“அட இராவணா! உன் அவையில் நான் தூதனாக வந்திருக்கிறேன்.யாவரும் என்னை வரவேற்க மறந்து பயத்தினால் சுருண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஹனுமான் இங்கு வந்த நாளிலிருந்தே உங்கள் வாய் பேச நா எழவில்லை .ஶ்ரீராமருடைய வீரம் உனக்கு தெரியுமா? அவருக்கும் ,சுக்கிரீவனுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான் உனக்கு தெரியுமா? “

கண்கள் சிவந்து நெருப்பு ஜ்வாலையைக்கக்கும் இராவணன் இடிப்போல் முழங்குகிறான்,

“ராமனும் லட்சுமணனும் எங்களுக்கு முக்கிய உணவு .உங்களைப்போல குரங்குகள் அதற்கு ஊறுகாய் போல் .எங்கள் கும்பகர்ணன் ஒரே பிடியில் உங்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிடுவான்,”

“அங்கதன் உடல் துடிக்கிறது. அவனது வீரத்தோள் போருக்கு துடிக்கிறது. ஆனாலும் தன்னை அடக்கிக்கொண்டு

“டேய் மூர்க்கா இராவணா. உடனே சீதா தேவியைக் கொடுக்காவிட்டால் உனக்கு மரணம் தான் . இராமர் சொல்லியனுப்பிய தூதும் இதுதான்.
அடே ராவணா!உன் மூஞ்சியை ஒரே குத்தில் தரையில் வீழ்த்த என் கை துடிக்கிறது.ஆனால் அப்படி செய்ய இயலவில்லை ஏனென்றால் உன் தலைகள் பரமேஸ்வரனுக்கு அர்ப்பணமானவை .சிவ சொத்தல்லவா அது! சிவ சொத்தை அழிக்க என் கை கூசுகிறது “

ஆஹா என்ன அருமையான கற்பனை இது. இராவணன் சிறந்த சிவ பக்தன் என்பதையும் இதில் ஏகநாதர் சொல்லிவிடுகிறார்.
இராவணனுக்கு இதைக்கேட்க மனம் ஏதோ செய்தது. ” யாரங்கே இந்த அங்கதன் என்ற குரங்கை பிடித்து அடையுங்கள்”
ஆயிரக்கணக்கான அரக்கர்களுக்கு விளையாட்டு காட்டியபடியே அங்கதன் மரத்துக்கு மரம் தாவி எல்லோரையும் அழைக்கிறான்.
இத்துடன் ஏகநாதரின் கற்பனை நிற்கவில்லை.இராவணனை ஏதாவது செய்துவிட்டே வரவேண்டும் என்ற தோன்ற அங்கதனால் இராவணனைக் காலால் உதைக்க வைக்கிறார். பின் அங்கதன் இராவணனின் கிரீடத்தைப் பறித்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து பறந்து போகிறான்.அவன் அப்படிப்போகும் போது அவனையுமறியாமல் அவனோடு வேறு ஒரு பொருளும் ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது.

இப்போது அங்கதன் ஸ்ரீ ராமனுக்கு முன்னால் .

“அங்கதா இது என்ன உன்னுடன் கொண்டு வந்திருக்கிறாய் .இது அநீதி ஆயிற்றே?” என்று கேட்டார் ராமர்.
அப்போதுதான் அங்கதன் தன் தலையில் ஏதோ ஒட்டிக்கொண்டு வந்திருப்பதைப் பார்க்கிறான்.அது இராவணனுடைய சபா மண்டபத்தின் கோபுரம் .
பரிதாபமாக ராமரைப் பார்த்தான் .
“அங்கதா விபீஷனனுக்கு நாம் அளித்த ராஜ்ஜியத்திலிருந்து ஒரு துரும்பையும் எடுத்து வரக்கூடாது. இது எப்படி நடந்தது?”

” சுவாமி இது எனக்கும் தெரியாமல் ஏற்பட்ட பிழை .தயவு செய்து பிழை பொறுத்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்”என்றபடி அவர் காலில் விழ அவரும் “அங்கதா இதை உடனே திருப்பி வைத்து விட்டுவா” என்றார்.

அங்கதனும் அங்கனமே செய்து பின் தான் கொண்டு வந்த கிரீடத்தை ராமனுடைய பாதத்தில் சமர்ப்பிக்கிறான் .ராமனும் மிகவும் மகிழ்ச்சியுடன் விபீஷணனை அழைத்து அந்த முகுடத்தை அவரது தலையில் சூட்டுகிறார்.

இதே போல் சில சம்பவங்களில் தன் கற்பனைகளையும் சேர்த்து எழுதியிருக்கும் ஏகநாதரின் பாவர்த்த இராமயணம் மராட்டியர்களால் விரும்பி படிக்கப்படும் ஒரு காவியம் ஆகும் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *