மே தின வாழ்த்துகள்
உழைப்பாளர் தினம் என்று உரக்கச் சொல்லி..
உலகம் மகிழ்கின்ற திருநாளிது!
உழைப்பின்பின் உழல்வதால்தானே
உயரங்களை நாம் எட்ட முடிகிறது!
அளவிலாத் துயரங்கள் அடிமைகளாய் வாழ்க்கை
நெடுநாளாய்த் தொடர்ந்திருந்த பெரும்கதையை மாற்றி
உரிமைக்குக் குரல் கொடுக்கும் தோழர்களால் ..
உயிர் பெற்று வந்ததிந்த மேதினமாம்!!
புவியெங்கும் வாழ்கின்ற மாந்தரெல்லாம்
ஏதோ ஒரு விதத்தில் உழைப்பவர்தாம்!
உழைக்காத எவருமிங்கே தேவையில்லை!
மணிநேரக் கணக்கினிலும் வரைமுறைகள்
வாரத்தில் ஒரு சில விடுமுறைகள்..
வகுத்தளித்த நல்லோர்க்கு நன்றி சொல்வோம்!!
கடமைகளும் உரிமைகளும் சரிநிகர்தான் எனும்
தத்துவத்தை என்றும் நாம் போற்றி வைப்போம்!!
உழைப்பாளர் தினத்தின் பெருமைதனை பறைசாற்றி
உயர்ந்துநின்று ஒருமித்தக் குரலிடுவோம்!!
உழைப்பாளர் தின வாழ்த்துகள்!..
அன்புடன்..
காவிரிமைந்தன்
படத்திற்கு நன்றி