நினைப்பது நிறைவேறும்.. நீயிருந்தால் என்னோடு –  (கவிஞர் மணி)

கவிஞர் காவிரி மைந்தன்

ஒரு திரைப்படத்திற்கு என்ன பெயரிடுகிறோமோ என்பது மிக முக்கியமான விஷயம்! அப்பெயர் சூட்டப்பட்டபின் – பாடல்கள் பிறக்கும்பொழுது படத்தின் பெயர் பாடலாசிரியருக்கு நினைவுக்கு வரும்! அப்படி வந்த நினைவையே பல்லவியாக்கி இனியதொரு பாடல் இதோ வருகிறது!

‘நினபை்பது நிறைவேறும்’ திரைப்படத்திற்காக எம்.எல்.ஸ்ரீகாந்த் – இசையமைத்து வாணிஜெயராம் அவர்களுடன் பாடிய பாடல்! கவிஞர் மணி என்பவர் எழுதிய பாடல் என்பது புதிய செய்தி!! இனிமைதவழும் கானமாய் இளமையை ஏந்திவருகிறது! கவிதை கால் முளைத்து வரும் அழகைப்போல!!

ஒருவரில் ஒருவர் ஒன்றிக் கலக்கும் உன்னத உறவினையும் அதில் பிரிவுவந்தால் தாங்கிட இயலாத் தன்மையையும் கவித்துவமொழியல் கலந்து தருகிறார் பாடலாசிரியர்!

தெள்ளுத்தமிழ் உள்ளமதை கொள்ளை கொள்ள முயலும் என்பதனை சரணத்தில் ஒய்யாரமாய் சொல்லியிருக்கும் அழகில் நாம் சொக்கிப்போகிறோம்!

காதலர்கள் நினைப்பது நிறைவேற வேண்டும் என்பதும் அவர்கள் நலம்பெற வாழ வேண்டும் என்பதும் விழைவாகிறது! எப்போது தெரியுமா?
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…

படம்: நினைப்பது நிறைவேறும்
குரல்கள்: M.L ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்
இசை: M.L.ஸ்ரீகாந்த் பாடல்: மணி

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு…
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

தனிமை உனக்கேது…தாங்கும் இதயம் எனக்கேது..
தனிமை உனக்கேது…தாங்கும் இதயம் எனக்கேது..
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

காதல் கவிபாடு…காலமெல்லாம் உறவாடு..
காதல் கவிபாடு…காலமெல்லாம் உறவாடு..
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் – Ninaipathu Niraiverum – YouTube – Google+ – M.L. Srikanth

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *