கிரேசி மோகன்

Bhagavad Gita. Watercolor. #Krishnafortoday - Keshav
Bhagavad Gita. Watercolor. #Krishnafortoday – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————

Madhuradhipathy - oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness. Keshav
Madhuradhipathy – oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness. Keshav

’’கண்ணன் காப்பு’’
——————————–
உறியிழுத்தாய், பின்னர் உரலிழுத்தாய், பின்னர்
மரமிழுத்தாய், பின்னர் மதகில் – அரவிழுத்தாய்,
பின்னர் நகிலிழுத்தாய், பெண்கள் துகிலிழுத்தாய்,
கண்ணா எனையிழுப்பாய், காப்பு….

சகடா சுரனை சுமந்தா காய,
முகடில் முறித்த முகுந்தா, – பகடையில்,
தோற்றவர்க்காய் தேரேறி , நூற்றவர் மாய்ந்திட,
கூற்றவனாய் நின்றவனே, காப்பு….

கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்,
தேடிப் படித்தும் திருப்தியில்லை, – நாடியில்,
ஏதோ அதிருப்தி, என்னென்று சொல்வது,
கீதோ பதேசகா, காப்பு….

தரையில் புரளபீ தாம்பர ஆடை,
சுருளும் முடிநுதல் சாய, -முரளி
மனோகரா வந்துன், மதிவதனம் காட்டு.
கனாவரும் நேரத்தில், காப்பு….

கன்னத்தில் அன்னையிட்ட, கண்மை திருஷ்டியது,
வண்ணக் கருமையில் வாடிட, -எண்ணற்ற,
இம்சைக்(கு) இடமாகி, இன்னல் கடந்தோனே,
கம்சன் மருகோனே, காப்பு!!
——————————————————————————————————————-

 

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *