பொம்மைகள்!
பிச்சினிக்காடு இளங்கோ
நாங்கள்
பொம்மைகள் அல்ல…
உங்கள்
பிள்ளைகளின் மகிழ்ச்சி!
பிள்ளைகளைப் பெற்றதால்
உங்களுக்கு மகிழ்ச்சி!
எங்களைப் பெற்றால்
உங்கள்
பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி!
எங்களை வாங்காமலிருந்தால்
உங்களுக்கு நட்டமில்லை!
பிள்ளைகளின் முகத்தில்
மகிழ்ச்சியைக் காணாமலிருந்தால்
உங்களுக்கு லாபமில்லையே!
நினைவில் வையுங்கள்…
உங்களைப்போலவே நாங்களும்
உங்கள்
பிள்ளைகளுக்காகவே இருக்கிறோம்!
நீங்கள்
உங்கள்
பிள்ளைகளுடன் விளையாடுகிறீர்கள்!
உங்கள் பிள்ளைகள்
எங்களுடன் விளையாடுகிறார்கள்!
உங்கள் கைகளில்
பிள்ளைகள்!
பிள்ளைகளின் கைகளில்
நாங்கள்!
மீண்டும் நினைவுபடுத்துகிறேன்…
நாங்கள்
பொம்மைகள் அல்ல…
உங்கள்
பிள்ளைகளின் மகிழ்ச்சி!
மகிழ்ச்சியை வாங்குங்கள்!
மகிழ்ச்சியாய் வாங்குங்கள்!
(சிராங்கூன் சாலையில் ஒரு பொம்மைக்கடைக்குப் போனபோது ஒரு கவிதை எழுதுங்களேன் என்றார்கள். விளைவு இந்தக் கவிதை!)