எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் 

 

கருவறையில் சுமந்தவளே14547_622869037804572_1530437069541877286_n
கண்விழித்துக் காத்தவளே
பெருவிருப்பத் தோடென்னை
பெத்து வளர்த்தவளே
அருமருந்தாய் காத்தவளே
அன்பிலென்னைத் தோய்த்தவளே
ஒருக்காலும் உனைமறவேன்
உள்ளமெலாம் நீதானே

நானழுத போதெல்லாம்
ஊனுருகி நின்றவளே
தேனெனவே எனதெச்சில்
திகட்டாமல் சுவைத்தவளே
பாலொழுகும் முகம்பார்த்து
பனிபோல சிரித்தவளே
பழிங்குமுகம் என்மனதில்
பதிந்துபோய் இருக்கிறது

பால்குடித்த போதெல்லாம்
பல்லாலே கடித்திடுவேன்
நீசிரித்து நின்றிடுவாய்
நெத்தியிலே கொஞ்சிடுவாய்
கடித்த இடம் நொந்தாலும்
கருணையுடன் பார்த்திடுவாய்
நினைத்துமே பார்க்கின்றேன்
நீதானே தெய்வமம்மா

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *