கிரேசி மோகன்

Krishna for today. Venugopal. Watercolour.  Keshav
Krishna for today. Venugopal. Watercolour.
Keshav

கண்ணன் திருப்புகழ்….
——————————————
’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
———————————————————-

Krishna for today Goverdhana series. Watercolour.  Keshav
Krishna for today Goverdhana series. Watercolour.
Keshav

 

புதிரவன் போக்கு புலனவன் தாக்கு
மதிரதம் மாயையில் மூழ்கக் -கதிரவன்
போல்தோன்றிக் காரிருள் தோல்சீவிக் காத்திடும்
மால்வண்ணம் யாமறியோ மே….(36)

மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
பக்திகர்ம ஞானவழிப் பேறு….(37)

பேரைப் புகழைப் பலனை எதிர்பார்த்து
நூறைக் கடந்தும்நீ நோகின்றாய் -பாரோர்
பரிகசிக்கக் காட்டில் பிணமாகும் முன்பே
அரிபசிக்(கு) ஆளாகி ஆடு….(38)

ஆடு நனைய அழுத நரியாக
வாடுவாய் நெஞ்சே வழியடைத்து -நாடகம்
சோகமயம் ஆகும்முன் மேகநிற தேகனை
ஆக விடாதிங்(கு) அழை….(39)

அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு….(40)

———————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *