— கவிஞர் காவிரிமைந்தன்

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…

adimaippen

நல்லோர் வாழ வழியில்லாத நாட்டில் நடப்பது என்ன?
தன்னலம் தலைவிரித்தாடும் .. பொதுநலம் பூமுகம் வாடும்..
சர்வாதிகாரியின் கரங்களில் சிக்கி ஒரு சமுதாயம் இழிபடும்..
இன்னலைத் தீர்க்க இங்கே எவருமே இல்லையா என்கிற ஏக்கம் குரலாய் மேவிடும் வேளை – பாரில் தேவனாய் தோன்றுவான் ஒருவன்.. புராணங்கள் முதலாக புரட்சியில் பூத்த வரலாறுகள் எல்லாம் இந்த பூமியில் சாட்சியாகவே.

தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

 

வாலி அவர்களின் வைர வரிகள்.. அடிமைப் பெண் திரைப்படத்திற்காக .. கே.வி.மகாதேவன் இசையில் ..டி.எம்.சௌந்தரராஜன் குரலில் …
திரைப்படத்தின் முடிவுக் காட்சியாக .. சுயநலத்திற்கு முடிவு கட்டி.. பொதுநலத்திற்கு திறப்பு விழா நடத்தும் காட்சி!

 

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

 
ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் அர்த்தங்களைப் பதித்து .. பாடல் வரிகளாக்கித் தந்திருக்கிறார்.
வண்ணத் தோகை விரித்து மயிலாடும் காட்சியும்.
விலங்குகளை உதாரணம் காட்டி.. மனிதனைத் திருத்த முயற்சிக்கும் கதையின் நாயகன்…
புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் அவர்களது நடிப்பில் –
மக்கள் சபை மகிழ்ச்சியில் கூக்குரலிட .. புதிய சமுதாயம் மலர்கிற காட்சி!

http://youtu.be/A1TQT3jmg74

காணொளி -http://youtu.be/A1TQT3jmg74

 

பாடல்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால் வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ ?
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்

தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *