கிரேசி மோகன்

Dialogues with Arjuna series. #krishnafortoday Keshav
Dialogues with Arjuna series. #krishnafortoday
Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் அந்தாதி’’
———————————-

Dialogues with Arjuna series. #Krishnafortoday keshav
Dialogues with Arjuna series. #Krishnafortoday
keshav

தனித்த திரளே, மனித்த உருவில்,
ஜனித்தாய் குருவாய் ஜகத்தில், -திணித்த,
உடலுயிர் ஆவி, உனக்கர்ப் பணித்தேன்,
கடலேஇச், சிற்றலையைக் கொள்….(61)

கொள்ளைக் கொடுத்த, கவிசிம்மன் உள்ளத்தைக்
கொள்ளை அடித்த குதிரையே, -கொள்ளத்,
தயக்கமேன் என்னை, அயக்ரீவா வந்திப்,
புயக்கடைப் புண்ணாக்கைப் பார்….(62)

பாரப்பா என்னுள்ளே, பாரதப் போரப்பா,
கூறப்பா நேரிடையாய் கீதையை, -பாரப்பால்,
பாதாள விண்ணுக்குப் பாய்ந்ததிரி விக்கிரமா,
வேதாள வஞ்சநெஞ்சை, வீழ்த்து….(63)

வீழ வயதின்றி, வாழ வலுவின்றி,
ஆழப் புலன்வாய் அகப்பட்டோம், -வேழம்,
குரல்கொடுக்க அன்று, விரல்சொடுக்கில் வந்த,
விரல்சக் கரனை வணங்கு….(64)

வணங்கா முடியாய், வளையா பதியாய்,
இணங்கா(து) இளமைத் திமிரால், -கணங்கள்,
கெடுவதன் முன்னம், கடல்நிற வண்ணன்
அடிதொழ மூப்பும், அழகு….(65)

——————————————————————————————————————

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *