கிரேசி மோகன்

AnmeDT1305201407

கட்டளைக் கலித்துறை
—————————————-
காப்பு
——–images (1)

துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்
இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே….(1)

அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே….(2)

பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே….(3)images (2)

உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே….(4)

கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே….(5)

அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே….(6)….

பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்4818364
உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே….(7)

வசமான சித்தி விஷமாம் அதனை விரும்பிடாதே
நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே….(8)
பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே….(9)

வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே….(10)

சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய
இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தைabiramii
அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே….(11)

சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே…(12)

தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே….(13)

பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்று
தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே….(14)

images (3)
வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே….(15)

தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
பத்தினி பக்தர்தம் பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே….(16)

 

படங்களுக்கு நன்றி 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *