திருமால் திருப்புகழ் (92)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
’’கண்ணன் அந்தாதி’’
———————————–
அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,
அழகவன் லீலா அபங்கம், -பழக,
அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
பொழுதுமவன், பொற்பைப் புணர்….(66)
புனர்வசுவே, பக்திப் புயல்அனுமர்க்(கு) ஈடாய்,
உணர்வுக்(கு) உணவாம் உன்னைக், -கணமேனும்,
தாரகத்தால் தேடும், தவவலிவைத் தந்தருள்வாய்,
ஏ!ரகு ராமா எனக்கு….(67)
எனக்கும், உனக்குமிங்(கு) ,ஏற்பட்ட பந்தம்,
கணக்கு வழக்கில்லை கண்ணா, -பிணக்காய்,
நடுவந்த மாயையால் ,நாமிருவர் ஆனோம்,
முடவன்நான், கொம்புத்தேன் நீ….(68)
நீயாக நானாகும், நாளாம் அதுவரை,
தீயாய்த் திரியாய்த், தனித்திணைவோம், -சேயாகி,
வாயார உண்ணவா, தாயாகி ஊட்டவா,
மாயோனுன் இன்பம் மயர்வு….(69)
மயர்வறு நெஞ்சம், உயர்வுறு உள்ளம்,
அயர்விலா ஆற்றல் அளிப்பான், -துயர்வரும்,
முன்பே வருவான் ,முகுந்தன் முடக்கிட,
அன்பே சிவமாய் அலர்ந்து….(70)
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/