— எம்.ஜெயராமசர்மா

 

Vallamai_5
சொன்னயமும் பொருனயமும்
சுவையாகத் தந்துநிற்கும்
தென்னகத்தின் தமிழேடே
சிறந்தென்றும் வாழியநீ

மின்னிதழாய் வந்தாலும்
மேதினியை வலம்வந்து
இன்னமுதைச் சொரிந்துநிற்கும்
பொன்னிதழே வாழியநீ

அணுதொடக்கம் ஆன்மீகம்
அத்தனையும் தொட்டுநிதம்
ஆழமாய்க் கொடுத்துநிற்கும்
அருமை இதழ்நீயன்றோ

பெருமையுடன் உனைப்படித்து
பேரறிவு பெற்றுநிற்கும்
பெருங்கூட்டம் உந்தனுடன்
பிணைந்துமே நிற்கிறது

தமிழார்வம் கொண்டோரை
தானணைத்து நிற்குமுந்தன்
தாய்மையினை நினைந்து
தலைசாய்த்து நிற்கின்றேன்

ஐந்தாண்டில் அடிவைக்கும்
அழகுதமிழ் குழந்தையம்மா
ஆல்போல நீஇருந்து
அனைவருக்கும் நிழல்தருக

வரம்பலதைப் பெற்றபடி
வல்லமையாய் வந்தவளே
வாழ்நாளில் நீயென்று
வளர்ந்தோங்க வாழியவே

வல்லமையே உனைப்பார்க்க
வல்லமையே வருகிறது
தெள்ளுதமிழ் படையலோடு
தினமுமெமைச் சேருகிறாய்

அள்ளஅள்ளக் குறையாமல்
அழகுதமிழ்ச் சுரங்கமாய்
வல்லமையே திகழுகிறாய்
வளர்ந்திடுக பல்லாண்டு

எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வளர்ந்திடுக பல்லாண்டு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *