கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
’’கண்ணன் அந்தாதி’’
————————————-

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கீழென்றும் மேலென்றும், தாழ்வு தகவென்றும்,
வாழ்வென்றும் சாவென்றும் வாடுவதேன், -பாழ்மனமே,
எங்கும் எதனுள்ளும், எப்போதும் உள்ளுறையும்,
சிங்கத்தைச் சந்திக்க முந்து….(96)

முந்துகின்ற மூளையும், உந்தும் புலன்களும்,
அந்தநாள் தொட்டே அசுரர்கள், -சிந்தையாம்,
எண்ணக் குடத்தினை, எண்ணற்ற தூளாக்கிக்,
கண்ணன் கழலடியில் கொட்டு….(97)

கொட்டுது தேளின், கொடுக்காய்ப் புலனைந்தும்,
பட்டது போதும் பரந்தாமா, -சட்டென,
வந்தெனக்குச் சத்துவ, வாழ்வை அளித்திடுவாய்,
நந்தலாலா இந்தநாளே நீ….(98)

நீயின்றி நானில்லை, நானின்றி நீயுண்டு,
தீயின்றி தீபம் திரிதானே, -வாஇன்றே,
வெப்பமாய் வந்தென்னை, அப்புவாய் சந்தனமாய்,
அப்பனே ஆரா அமுது….(99)

அமுதா அளவினை, விஞ்சுகின்ற நஞ்சாம்,
எமதாசை நெஞ்சினை ஏற்று, -குமுதவாய்,
பேய்ச்சி முலைப்பாலை, உண்டதுபோல் எம்மனச்,
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….(100)

———————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *