இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

0

Ilayaraja-Wallpaper

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ… கவிஞர் வாலி இசை ஞானி இளையராஜா ஜெயச்சந்திரன் பி. சுசீலா

உள்ளத்து உணர்வுகளில் பொங்கி வருவது கவிதை! கால வெள்ளத்தில் கோடிக்கணக்கான மறைந்த போதிலும், தங்களது பூவுலக வாழ்விற்குப் பின்னரும் புகழ் உலகில் வாழ்பவர்கள் மிகக் குறைவே! எனினும் கவிஞர்கள் என்று போற்றப்படும் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளால் யுகங்களைக் கடந்து நினைக்கப்படுவதும் அவர்தம் வரிகளால் வாசிக்கப்படுவதும் பிற துறைகளில் சாதனைப் படைத்தவர்களைக் காட்டிலும் அதிகமே!

எனவேதான் திருவள்ளுவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருகிறார்… திருக்குறள் மூலமாக.. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வாயிலாக.. கவிச்சக்ரவர்த்தி கம்பன் – கம்ப ராமாயணம் வழியாக.. மேலும் இவர்தம் கவித்துவ சிந்தனைகளில் ஆழ்ந்திடும் காரணத்தால் படைப்பாளன் தனது படைப்புகளில் இவர்கள் பயன்படுத்திய யுக்தி.. உவமைகள் போன்றவற்றின் பிம்பங்களைக் காணமுடிகிறது.

ஒரு பெண்ணை வர்நிக்கின்றபோது.. நிலவோடும்.. மலரோடும்.. தென்றலொடும்.. நதியோடும்.. எனப் பல்வேறு உவமைகளைக் கையாண்டுவரும் கவிஞர்கள் – அவளைக் கவிதை அணவும் தவறவில்லை.. புதுக்கவிதை எழுத்தாளர்கள்கூட ஒற்றை வார்த்தையில் கவிதை கேட்டார்கள்…. நான்.. உன் பெயரைச் சொன்னேன் என்று விளம்புவதும் இவ்வகையில்தானோ?

கவிஞர் வாலியோ… இதற்கும் ஒருபடி மேலாக..

காளிதாசன்.. கண்ணதாசன்.. கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம்.. ரசிக்கலாம்.. என பல்லவியெடுத்து பாடல் தருகிறார். ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ திரைப்படத்தில் இசை ஞானியின் இனிய இசையில் இன்னுமொரு காதல் தாலாட்டாக.. ஜெயச்சந்திரன் பி. சுசீலா குரல்களில்…

‘பிரம்மன் கண்ணதாசனே உன்னைப் படைத்ததாலே..’ என்று மின்சாரக் கண்ணா திரைப்படத்திலும் ஒரு வரியும் இதே வரிசையில் உருவானதே.. (உன் பேர் சொல்ல ஆசைதான்)..

காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய …
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக

இனிமை தான் … இனிமை தான் பொழிந்ததே வழிந்ததே
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா… படிக்கலாம்… ரசிக்கலாம்…
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய … ஹோய்
மேலும் கீழும் கண் பார்வை அபினயம் புரிய
பூ உடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க
பாற் கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
சமயம் தான் …
சமயம் தான் அமைந்ததே அழைத்ததே

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

திரைப் படம்: சூரக் கோட்டை சிங்கக் குட்டி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *