கிரேசி மோகன்

 

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–blogger-image-1491932381
உள்ளே புகுந்த, ஒருதுளி விந்துக்கு,
பிள்ளை வடிவம் பெறவைப்போன், -கள்ளன்,
பரிட்சித்தை கர்ப்பப், பரிசோ தனைசெய்,
அரிச்சித்தம் ஆரறிவா ரோ….(180)

 
உண்டி உடமைக்(கு), உகந்தோடி உச்சித்தேன்,
நொண்டி முடமாய் நசிப்பீரே, -பண்டையில்,
ஆலில் மிதந்த, அனந்த பதுமநாபன்,
காலில் விழுவீர் காப்பு….(181)

உதவிக் கரம்நீட்டி, உய்யவழி காட்டி,
கதவைத் திறந்திடும் கண்ணா, -பதவிப்,
புகழாசை விட்டுனது, பண்டரிவாழ் வீட்டில்
திகழ்வேனோ தூணில் துரும்பு….(182)

வானரம் ஆயிரம், சூழ இலங்கைக்குப்,
போனராமன் கட்டிய பாலத்தில், -ஏநரா!,
ஏறிக் கடக்க, எதிர்கரையில் தெய்வமாய்,
மாறிடச் செய்யும் மூலம்….(183)

வான்முகடு மீறி, வளர்ந்திறங்கி மாபலிக்,
கோன்முகடு தொட்டக் குறளுருவே, -தேன்முகடு,
ஏறத் தவித்திடும்,ஏழை எனக்கருளை,
கூறையைப் பிய்த்துக் கொடு….(184)                                                                                            

வாழை யடிவாழை, வந்தோர் வளத்துடன்,
வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள், -ஏழை,
சகாயா ஏ!பாண்டு, ரங்கா என்னுள்,
புகாயோ புகல்வாய் பதில்….(185)

————————————————————————————————-

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *