கிரேசி மோகன்

Vaatsalyam series #krishnafortoday Keshav
Vaatsalyam series #krishnafortoday
Keshav

 

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————————-

Experiments with Krishna series. #krishnafortoday Keshav
Experiments with Krishna series. #krishnafortoday Keshav

மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்திரவில்,
ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
கார்முகில் வண்ணன்மேல், கோதூளி மின்னிட,
பார்மிசை ராப்பக லாச்சு….(222)

கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
அண்ணா பலராமன் நலம்தானா. -பின்னால்,
இதுபோ லெனைநீ, இங்கிதமாய்க் கேட்டு,
பதிலொன்(று) எழுதிப் போடு….(223)

கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி,
யசோதையாள், நந்தகோபன், யாதவரைக் கேட்டு,
விசாரித் ததாக விளம்பு….(224)

கல்லில் சிலையாகக், காற்றில் இசையாக,
புல்லில் பிருந்தா வனமாக, -சொல்லில்,
பொருளாக அல்லும், பகலாகும் கண்ணன்,
இருதாள் எண்ணல் இணைப்பு….(225)

பேரா யிரம்கொண்டு, ஷீராப் தியிலுறங்கும்,
ஆரா அமுதா அடைக்கலம், -தீராத,
பித்தாண்ட ராதையாய், புத்தாண்டில் மாறிட,
அத்தாயென் புத்தி அமர்….(226)

அம்மியில்லை அண்ணாந்து, அருந்ததி காணவில்லை,
நம்முடைய சந்திப்போ நட்டநிசி, -விம்மியழும்,
ராதைக்குக் கண்ணன், ரகசியமாய்க் கூறினான்
கோதையே நானுன் குழவி….(227)

——————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *