கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

——————————————————————————————————-
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
—————————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

பூந்தன மாதோடு, சாந்தமும் பூசிய,
காந்தனே கண்துயில்ஏ காந்தனே, -நான்தினம்,
நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்,
வெண்பாவில் பாட விரும்பு….(290)

காண்பதுன் கோலத்தை, கேட்பதுன் ஜாலத்தை,
பூண்பதுன் நாமத்தை போற்றுதலாய், -கூன்பதும,
கொங்கையாள் மார்பில், குலாவும் அரங்கனே,
சங்கையா உன்தாள் சரண்….(291)

குறையெனக்குன் காட்சி, நிறையெனக்குன் நாமம்,
சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி, -அரியுனக்கு,
இன்னும் தயக்கமேன், என்னைப் பிடித்திட,
கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….(292)

கரத்தில் எழுத்தாணி, கற்பனையில் வாணி,
புரத்தை மறந்து புணர்வோம், -தரத்தில்,
குறையாத வெண்பாக்கள், கூடிப் பெறுவோம்,
இறையாத வாவா இசைந்து….(293)

தூணுண்டு வீட்டில், துரும்புமுண்டு, வாஞ்சையாய்,
நானுண்டு வாராய் நரசிம்மா, -பூநின்ற,
சாந்த இலக்குமியை, ஏந்திக் களிக்கின்ற,
காந்த வடிவில் கனிந்து….(294)

அய்யோ எனக்குரல், அன்றிட்ட பாஞ்சாலி,
மெய்யாடை மேவ மறைத்தனை, -அய்யா,
தவலையில் கட்டித், தயிராடை ஏற்றென்,
கவலையை கட்டிக் கசக்கு….(295)

—————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *