விடை
-மன்னை சதிரா
நாணத்தால் சிவந்த கண்கள்
நகைதவழ்ந்து மின்னும் இதழ்கள்
மான்கொடுத்த மருட் பார்வையளே
மனமிலையோ வாய் மலர்த்த!
தங்கத்தில் வைரம் பதித்ததுபோல்
அங்கமெலாம் அழகு மிளிர்ந்திடச்
சிந்தையினிக்கும் செந்தமிழ்ச் சிலையே
வந்து தானாக மலர்வாய் திறவாயோ?
நாளுக்கு நாளுன்னை நினைந்திரங்கி
நான்மெலிந்து போனேன் வாடும்என்
தோளுக்குத் தோள்கொடுக்க மனமிரங்கு!
வாள்தோற்கும் விழியழகுச் செல்வியே!
வாய் மலர என்னதடை? ஏது தடை?
உன்னைச் சிலையென வர்ணித்ததாலா
நான்விடுத்த சொல்லுக்கு விடையேயில்லை!