கிரேசி மோகன்

Ksheerasagara Shayana, oil on canvas.  Keshav
Ksheerasagara Shayana, oil on canvas. Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
”கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————-
மகாலக்ஷ்மி தாயார் போற்றி….
——————————————

 Bhagavatha - Balarama triumphantly diverts Yamuna's course
Bhagavatha – Balarama triumphantly diverts Yamuna’s course

வாயார வாழ்த்து, வடவேங் கடன்நெஞ்சத்,
தாயாரைப், பூவாழ் திருமகளை, -ஓயாமல்,
அன்னை கடைக்கண், அனுக்கிரகம் கொண்டோர்முன்,
முன்னை வினைகள் முடம்….(314)

திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
———————————————————————————————

Gajalakshmi. Watercolour. Inspired by Botticelli.
Gajalakshmi. Watercolour. Inspired by Botticelli.

வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்,
பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின், -கீதவல்லி,
ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
சாதகனென் சிந்தையில் சேர்….(315)

அராப்பள்ளி சாய்ந்து, அரங்கத்தை ஆளும்,
பராத்பரா, பார்த்தன்தேர் பாகா, -”மரா”சொல்லி,
கானகத்து வேடன், கவியானான், நின்னருளால்,
நானதற்(கு) இணையாக நல்கு….(316)

பீதாம் பரமவிழ, போட்ட நகைசிதற,
வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி,
கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய,
நேசனக் கேசவனை நம்பு….(317)

என்னை அகலாக்கி, எண்ணையாய் அன்பூற்றி,
உன்னை வளர்த்தேன் ஒளியாகக், -கண்ணனே,
உன்னொளியில் பாய்ந்து, உறுமாறும் பூச்சியாய்,
என்நிலையை மாற்றிக்கொள் ஏற்று….(318)

அண்ணன் பலராமன், பின்னை சுபத்ராவும்,
உன்னொடு பூரியில் உற்சவராய், -நின்றிட,
கண்ணா ஜகன்நாதா, கோர்த்தாய் பிறந்தகத்தை,
என்னேவுன் கோகுல ஈர்ப்பு….(319)

—————————————————————————————————————–

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2013_07_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *