சு.ரவி 

 

Click on link below to listen to some Krishnar Songs written by me & sung by SPB, CHITHRA,KS RAJAGOPAL- music by Ramesh Vinayagam n one song by L.Krishnan.
4 stanzas of Vaasudeva Ashtakam can be heard in SPB’s golden voice..

Scroll below for full Ashtakam n a few Krishna paintings frm my iPad..

For ketka, padikka, paarkka rasikka..

Su.Ravi

 

https://archive.org/details/SuraviKrishnarAlbumSongs

3EFC1BDF-2029-4A1C-9FB5-7C905DBE2E77

வாஸுதேவ அஷ்டகம்
சினம் கொண்ட மாமன்
சிறை தந்த பாலன்
தினம் கோடி லீலை
நிகழ்த்தும் ப்ரதாபன்
மனம் கொண்ட கள்வன்
மழை மேக வண்ணன்
இனம் கண்டு கொண்டேன்
இவன் வாசுதேவன் (1)

விளம் சாய்த்த கன்றும்,
விரல் மீது குன்றும்
உளம் தன்னில் என்றும்
படம் போல் இலங்கும்
இளம் பிள்ளை என்றாலும்
தெய்வ ஸ்வரூபம்
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (2)

55DC1229-D01F-4DCE-9656-39E72922A910

விடம் கோண்ட நீரில்
‘துடும்” என்று பாயும்
படம் கண்டு தாவிப்
பதம் மாற்றி ஆடும்
நடம் செய்த பாதத்தை
நாராயணன் என்(று)
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (3)

‘ஹரே த்வாரகா வாஸி
கோவிந்தா’ என்றே
குரல் தந்த பெண்ணின்
குறை தீர்த்த தெய்வம்
அறம் காக்க வென்றே
முனம் தூது சென்றான்
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (4)

2950F0C3-96B2-4409-928B-2594D6E13CDA

களம் கண்ட பார்த்தன்
கலங்கித் துடித்தே
உளம் சோர்ந்த நேரம்
உரம் தந்த சாரம்
நலம் காட்டும் கீதை
நவில்கின்ற தாதை
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (5)

குழல் கொண்டு ராகம்
இசைக்கின்ற மேகம்
தழல் உண்டதே போல்
தகிக்கின்ற தேகம்
சுழல்கின்ற சிந்தைக்குள்
சூல்கொண்ட மோஹம்
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (6)

B7D35E70-35CF-47B7-ADFD-ECCC825A75EA

இவன் கோபியர் நெஞ்சில்
காதல் ப்ரவாஹம்
இவன் யோகியர் நெஞ்சில்
ஞானத் தடாகம்
இவன் யாவும் ஆகின்ற
ப்ரம்ஹ ஸ்வரூபம்
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (7)

இவன் கேசவன், மாதவன்
பத்மநாபன்
இவன் மாயவன், வாமனன்
பாண்டுரங்கன்
இவன் ஸ்ரீதரன், விஷ்ணு
கோவிந்தன் என்றே
இனம் கண்டு கோண்டேன்
இவன் வாசுதேவன் (8)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *