சேசாத்ரி பாஸ்கர்

 

என் அப்பா காலமாவதற்கு முன் அவருக்கு எப்படியாவது பென்ஷன் வாங்க கடும் முயற்சி செய்தேன் . கலெக்டர் முதல் கடை ஊழியன் வரை எல்லாரிடம் சொல்லியாகிவிட்டது . அவர் பணத்தை அவர் காண வேண்டும் என்ற ஆசை . ஏகப்பட்ட கடிதம் , தனி கோப்பு என்று எல்லாம் செய்தாகி பலன் இல்லை . கட் ஆப் எண்பத்தி ரெண்டு . ஒரு வருஷம் கூட .. சாரி என்றார்கள் . சார் , நாற்பது வருஷ சர்வீஸ் .என்றேன் …. கேஸ் போடு …. ஜட்ஜு கிட்ட கூட்டி போ ..

..தப்பில்லையா சார் …

பணம் வேணும்னா எதை வேணா செய்யலாம் ..

சண்டை போட்டு பணமா … வேணாம் .அடுத்த பஸ்ல போயிடலாம் .

இல்ல .நாளைக்கு அம்மாவுக்கும் உபயோகமாக இருக்கும் என்றேன்

அவர் பார்த்த பார்வையின் அர்த்தம் அப்போது விளங்கவில்லை .

இல்ல பா … ரங்கா விலாஸ்ல காபி சாப்ட்டுட்டு போலாம் .

ரெண்டு வாரம் கழித்து ஒரு கடுதாசி வந்தது

கலெக்டரின் பச்சை கையெழுத்து .

என் எழுத்துக்கு அவ்வளவு பலமா ?

அப்பாவை எழுப்பினேன் . பத்து மணிக்கு பட்டணம போகணும்
என்றேன் .

என்னத்துக்கு என்றார் .

பெரிய இடம் , கொஞ்சம் நல்லா போனும்…மணியை கூப்பிடவா …

பிளேடு என்கிட்டே இருக்கு ..தாடியை எடுத்துடு …

உன் இஷ்டம் என்றார் .

அங்கவஸ்திரம் போட்டுப்ப இல்ல …

இப்படி அலங்காரமா போனா எனக்கு வர பணமும் வராது .

அப்படி இல்ல பா … ஒரு மாநேர்ஸ் என்றேன் ..

நிறைய பேர் இருந்தார்கள் ..

கலெக்டர் பேசினார் .. எல்லோரிடம் மன்னிப்பு கேட்டார் . பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்றார் . கூட்டம் கலைந்தது .

ஆட்டோ என குரல் கொடுத்தேன் .

பஸ்லயே போலாம் என்றார் . அவரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை . அந்த கனமான மனம் அவர் இறந்த போது கூட வரவில்லை .

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பட்டணம் போகணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *