கண்ணதாசன் பாடல் கேட்டு கையைக்கட்டி நின்ற வாலி கட்டவிழ்த்து வந்து நின்று கவிதைமழை பொழிந்து நின்றார்
வாலி பாடி நின்றபோது போலிஅல்ல என்று சொல்லி தோழ் கொடுத்து நின்றவரே தோழமையில் கண்ண தாசன்
கண்ண தாசன் பாடலோடு கைகுலுக்கி வாலி பாடல் வண்ணமாக வந்த போதும் வைரமாக நின்ற தங்கே
பக்தியோடு பாடி நின்றார் பருவத்தார்க்கும் பாடி நின்றார் நித்தமே நினிவில் நிற்க தத்துவமும் பாடி வைத்தார்
வெற்றிலை போட்ட வாலி வெற்றிகள் பலதைப் பெற்றார் நெற்றியில் பொட்டு இன்றி நின்றதே இல்லை நாளும்
மெட்டுக்காய் எழுதி நின்றார் துட்டுக்காய் எழுதி நின்றார் பொட்டுவைத்த நெற்றி ஓடு பொறிபறக்க எழுதி நின்றார்
முருகன் பாடல் பாடிநின்று முயன்றுவந்த வாலி நாளும் அருமையான பாடல் தந்து அமர்ந்துகொண்டார் உள்ளம் எல்லாம்
தெருவெலாம் வாலி பாடல் தித்திப்பாய் ஒலிக்கும் போது பெரு மனதோடு மக்கள் பேணியே ஏற்று நின்றார்
வாலிநீ போட்ட வேலி வரலாற்றில் நிற்கும் ஐயா போலிநீ இல்லை ஐயா பொங்கிடும் தமிழின் ஊற்று ஊழியுன் பாட்டு நிற்கும் உலகுளோர் மனதில் நிற்பாய் வாலிபக் கவிஞ்ஞரே நீ வையத்தில் என்றும் வாழ்வாய் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
காவியக்கவிஞர் வாலியைப் பற்றி கவிதைதீட்டி அனுப்பிவைத்தீர்! ஏற்கனவே அனுப்பிய கவிதையின் மறு பதிவா என்றிருந்தேன்! வாலி பற்றிய உங்கள் கவிதை போகிற போக்கில் நீங்கள் ஜாலியாக எழுதியதோ?
சொல்லப்போனால் உங்கள் பேனா புரண்டுபடுத்தால் அது கவிதை! சொக்கவைத்தால் அது அமுதம்! கற்பனைச்சிறகுகள் விரித்து மின்னஞ்சலில் தோன்றும் மின்னல்பூக்களை அனுப்பிவைக்கிறீர்! ஆனந்தம் பெறுகிறேன்!
கற்பகம் படத்தில் அவன் கைவைத்தபின்னே கவிதைமகள் அவன்பின் நடந்தாளே! சொற்கோலம் அங்கே இசையோடு சேர்ந்து தேன்மாரிப் பொழிந்ததை யார் மறப்பார் இங்கே? கண்போன போக்கிலே பாடலைக் கேட்டோர் எல்லாம் இது கண்ணதாசன் பாடல் என்றே வாய்மொழிய.. அட.. தங்கத்தோடுதானே தன்பாடலை ஒப்பிட்டார்.. தகரத்தோடு அல்லவே என்று மனம் நிறைந்த கவிஞர்! அன்பே வா.. பாடல்முதல் காதலர்தினம் வரை அவர் வரைந்த பாடல்களின் சொர்க்கபுரி.. கலைஞரின் மனதைத் திருடிய கள்வன்! ஸ்ரீரங்கம்தந்த செல்வன்! காவியங்கள் பலவரைந்த நாயகன்! பாடல்களே பத்தாயிரத்திற்கும் மேலெழுதி படைப்பியலில் சரித்திரமே படைத்துவைத்தான்! உள்ளம் உருகுதய்யா பாடல்முதல் கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் பாடல் என பக்திப் பரவசத்திற்கு பஞ்சமில்லா வாலி! அவர் முதலாம் ஆண்டு நினைவுதினத்தில் (18.07.2014) உங்கள் கவியஞ்சலி ஆன்மாவிற்காக அர்ப்பணம்!!
காவியக்கவிஞர் வாலியைப் பற்றி கவிதைதீட்டி அனுப்பிவைத்தீர்! ஏற்கனவே அனுப்பிய கவிதையின் மறு பதிவா என்றிருந்தேன்! வாலி பற்றிய உங்கள் கவிதை போகிற போக்கில் நீங்கள் ஜாலியாக எழுதியதோ?
சொல்லப்போனால் உங்கள் பேனா புரண்டுபடுத்தால் அது கவிதை! சொக்கவைத்தால் அது அமுதம்! கற்பனைச்சிறகுகள் விரித்து மின்னஞ்சலில் தோன்றும் மின்னல்பூக்களை அனுப்பிவைக்கிறீர்! ஆனந்தம் பெறுகிறேன்!
கற்பகம் படத்தில் அவன் கைவைத்தபின்னே கவிதைமகள் அவன்பின் நடந்தாளே! சொற்கோலம் அங்கே இசையோடு சேர்ந்து தேன்மாரிப் பொழிந்ததை யார் மறப்பார் இங்கே? கண்போன போக்கிலே பாடலைக் கேட்டோர் எல்லாம் இது கண்ணதாசன் பாடல் என்றே வாய்மொழிய.. அட.. தங்கத்தோடுதானே தன்பாடலை ஒப்பிட்டார்.. தகரத்தோடு அல்லவே என்று மனம் நிறைந்த கவிஞர்! அன்பே வா.. பாடல்முதல் காதலர்தினம் வரை அவர் வரைந்த பாடல்களின் சொர்க்கபுரி.. கலைஞரின் மனதைத் திருடிய கள்வன்! ஸ்ரீரங்கம்தந்த செல்வன்! காவியங்கள் பலவரைந்த நாயகன்! பாடல்களே பத்தாயிரத்திற்கும் மேலெழுதி படைப்பியலில் சரித்திரமே படைத்துவைத்தான்! உள்ளம் உருகுதய்யா பாடல்முதல் கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் பாடல் என பக்திப் பரவசத்திற்கு பஞ்சமில்லா வாலி! அவர் முதலாம் ஆண்டு நினைவுதினத்தில் (18.07.2014) உங்கள் கவியஞ்சலி ஆன்மாவிற்காக அர்ப்பணம்!!