கலிகால கரிகாலன்
கிரேசி மோகன்
”கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’’ நாடகத்தில் என் பெயர் ர.மோகன் என்றுதான் அறிவிக்கப்படும்….அந்த சமயத்தில்(1975 என்று நினைவு) ஆனந்த விகடன் ஆசிரியர் வீயெஸ்வி ஒரு குட்டி நாடகம் எழுதித் தருமாறு கேட்டார்….முதன்முதலில் பத்திரிகையில் வந்த அடியேனின் சிறு நாடகம் ‘’கலிகால கரிகாலன்’’….நம் எழுத்து பத்திரிகையில் பார்க்கும் ஆர்வத்தில் அந்த வெள்ளிக்கிழமை கடைக்குச் சென்று ஆனந்த விகடன் வாங்கிப் பார்த்தால் அதில் ர(ர பாஃர் ரஙாச்சாரி)மோகன் கிரேசி மோகன் என்று போடப்பட்டிருந்தது….ஆக எனக்கு வீட்டுத் தாத்தா வைத்த பெயர் ர.மோகன்….விகடன் தாத்தா வைத்த பெயர் கிரேசி மோகன்….அடைமொழியை வார்த்துப் போட்டது ஆனந்த விகடன் ஆசிரியர் ‘’வீயெஸ்வி’’….என்னை கிரேசியாக்கிய இந்த சிறு நாடகம் பிற்காலத்தில் (80துகளில்) ‘’ஜூனியர் விகடனில்’’ அடியேன் ஆடிய ‘’கே.பி.டி சிரிப்பு ராஜன்’’ என்ற 5 நாள் மேட்ச்சுக்கு நெட்-ப்ராக்டீஸாக அமைந்தது….