கிரேசி மோகன்

கடந்த சில ஆண்டுகளாக அதிகாலையில் ஓவியர் கேசவ்வின் ‘’கண்ணன் வருவான்’’.…அதற்கு அப்போது(ஆழ்வார் சொன்னா மாதிரி’’அப்போதைக்கு இப்போதே’’) என்ன தோன்றுகிறதோ அதை ‘’வெண்பாவாக்கம்’’ செய்து கேசவ் மற்றும் சில நெருங்கிய நண்பர்களுக்கு அடியேன் அனுப்புவேன்….குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்….அந்தக் ‘’குழந்தை தெய்வத்தைக்’’ வண்ணமாகவும், எண்ணமாகவும் கொண்டாடுவது, எங்கள் இருவரின் உபாசனை, உத்யோகம்….ஏன் காலைக் கடன் என்று கூட கொள்ளலாம்….’’கண்ணன் திருப்புகழை’’ இனி ‘’கேசவ் வண்ணமும் – கிரேசி எண்ணமும்’’ என்ற தலைப்பில் வல்லமையில் பகிர்ந்து கொள்ள விருப்பம்….கண்ணனுக்கு கேசவ்வின் வண்ண ‘’அபிஷேகம்’’ , அடியேன் கிரேசியின் எண்ண ‘’அலங்காரம்’’…. முன்ன பின்ன இருந்தாலும் கண்ணன் ஏற்றுக் கொள்வான்…. அவனுக்குத் தெரியும் இது ‘’குழந்தைகள் பாடும் தாலாட்டு’’ என்று…. ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து….

முதலில் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து (கோகுலாஷ்டமியும், ஹேப்பி ஓணமும்) கூறிவிட்டு , அவனை நமக்காக உருவாக்கும் ‘’கிருஷ்ணப் பிரேமி’’ ஸாரி ‘’BRUSHணப் பிரேமி’’ கேசவ் பிறந்த நாள் வாழ்த்தும் கூறி துவங்குவோம்….

இன்று எங்கள் இல்லத்தில் கிருஷ்ண ஜெயந்தி….

oonam

“அவிழ்ந்துபீ தாம்பரம் அங்கம் நழுவ
கவிழ்ந்தநிலை வாக்கில் கண்ணன் -தவழ்ந்து
உதைத்துதைத்து இல்லத்தின் உள்ளே புகுந்து
பதிக்கின்றான் பாதப் பிறப்பு”….

HAPPY ஓணம்…

craz
“ஆனமட்டும் சுக்கிரன் ஆதியென்(று) ஓதியும்
தானமிட்ட மாடுபலி தாடைப்பல், – வானமெட்ட
ஆணுத்தமன் ஓங்கி அதைபிடித்துப் பார்த்ததை ,
ஓணத் திருநாளில் ஓது”….

craz1

Happy birth day KESHAV ….

keshav

“காவியக் கண்ணன் கதைகளைக் கேட்டிருப்போம்,
ஓவியமாய்க் காண, உடல்பொருள் -ஆவியைத்
தந்தனன் தூரிகையால் தாரணிக் (கு) இந்நாளில்
வந்துதித்த கேசவுக்கு வாழ்த்து”….ரசிகன் கிரேசி மோகன்….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *