இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (9)

 

நான் பாடும் முன்னே

(பாடல்)

 

images
நான் பாடும் முன்னே நீ பறவையாகிறாய்
நான் தேடும் போதோ தொடு வானமாகிறாய்
நான் வாடும்போதோ கன்னம் வருடும் தென்றலாகிறாய்
இமை மூடும்போதோ உற்றுப்பார்க்கும் கண்களாகிறாய்

நீ பாதையா நான் பயணமா
நான் பயணமா நீ மலர்களா
நீ மலர்களா நான் பரிதியா
நான் பரிதியா நீ வானமா

உயரே உயரே என்னை ஏற்றி உயரச் செல்லும் பெண்ணே
உயிரின் நிலைமை முழுதும் மாற்றும் உலகம் காணாத கண்ணே
மண்ணா விண்ணா சொல்லேன் கண்ணா (பாடும் முன்னே)

இரு கண்களில் பல கனவுகள்
பல கனவினில் சில காலைகள்
சில காலையில் சுப வேளைகள்
சுப வேளையில் வரும் பாடல்கள்

பாடல் நடுவே பல்லவி மறந்து சரணம் தேடும் போது
பனிச்சதங்கையில் பாரிஜாதங்கள் காதில் கேட்காது
காதில் விழுந்தது போலே உன்முன் (பாடும் முன்னே)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *