கற்றல் ஆற்றுப்படை – கற்றல் வழிகாட்டி – பயிலரங்கம்

0

சொ. வினைதீர்த்தான்
1

காரைக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முத்துப்பட்டணத்தில் அமைந்துள்ளது. எண்ணூறு மாணவிகள் பயில்கிறார்கள். பிளஸ் 2 படிக்கும் 124 மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் 24.07.2014 அன்று நடத்தும் வாய்ப்புப் பயிற்சியாளர் திரு வினைதீர்த்தான் அவர்களுக்கு அமைந்தது. தலைமை ஆசிரியை திருமதி சந்தானம், கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ணன், ஆசிரியர் திரு சார்லசு ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.

2aபோதுமான இடமில்லாததால் பெரிய பரிசோதனைச் சாலை கூடத்தில் நடுவில் மேடை போன்ற அமைப்பிருந்தாலும் இரண்டு பக்கங்களிலும் மாணவியர் அமர்ந்திருந்து மிகுந்த கவனத்துடன் பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பயிலரங்கின் நோக்கங்களான 1.மனித உறவுகள் மேம்படுத்தல் 2.நினைவாற்றல் பெருக்கல், தேர்வைப் பயமின்றி எதிர்கொள்ளல் பற்றிய சிந்தனைகள் விதைக்கப்பட்டன.

கற்றலில் ஆறு நிலைகள் 6 ‘R’s Read, Record, Reproduce, Refer, Rectify, Revise (படி,பதி,நினை,பார்,செவ்வையாக்கு,மீளவும்செய் என்பன கற்றல் வழிகாட்டியாக
(கற்றல் ஆற்றுப்படை) கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கப்பட்டது.

கற்றல் ஆற்றுப்படை.

READ – படி2
RECORD – பதி
REPRODUCE – நினை
REFER – (அசலை,பதிந்ததை) பார்
RECTIFY – செவ்வையாக்கு
REVISE – (மேற்கண்டவற்றை) மீளவும் செய்.

1.முதலில் ஒரு கேள்விக்கான பதிலை படிக்கவேண்டும்.
2.அடுத்து அந்தப் பதிலுள்ள முக்கியமான சொற்கள் 4,5 ஐ குறிப்புப் புத்தகத்தில் பதிந்துகொள்ள வேண்டும்.
3.மூன்றாவதாக அப்பதிந்த சொற்களை வைத்துப் பதிலை (படித்தை) நினைவு கூரவேண்டும்.
4.நினைவுகூர்ந்தது சரியா என்று அசலை ஒருமுறை பார்க்க வேண்டும்.
5.தேவையென்றால் பதிந்த முக்கியச் சொற்களோடு ஒன்றிரண்டு சேர்த்துச் செவ்வையாக்கிக் கொள்ள வேண்டும்.
6.மேற்கூறியவற்றை மீளவும் செய்து கற்றலைச் செழுமை செய்துகொள்ள வேண்டும்.

4கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கெடுத்துக்கொண்ட மாணவியர் பயிற்சியில் தாங்கள் கற்றவற்றைப் பதிவாக எழுதிக்கொடுத்தனர். கற்றலில் இவ்வாறு எழுதிப் பார்ப்பதும் ஒரு பகுதி என உணர்த்தப்பட்டது.
ஒரு பெண்ணுக்குக் கல்வி தந்தால் ஒரு குடும்பத்திற்கே கல்வி தந்ததாகக் கூறுவார்கள். கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கப் போகும் வாழ்வின் வசந்தத்தில் இருக்கும் 124 மாணவியரிடையே நல்லநெறிகளைப் பகிர்ந்துகொண்டது மிக மனநிறைவைத் தந்ததாகப் பயிற்சியாளர் திரு சொ.வினைதீர்த்தான் குறிப்பிட்டார்.

1,2.அரசினர் மேல்நிலைப் பள்ளி படங்கள். 3.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு சிவராமகிருஷ்ணன் பயிற்றுனரைக் கௌரவித்தல் 4,5.மாணவியர் குறிப்பெடுத்தல் 5.திரு சிவராமகிருஷ்ணன், திரு வினைதீர்த்தான், ஆசிரியர் திரு சார்லஸ். 6.மாணவியர். 7.நன்றி உரைக்கும் மாணவி. 8. Feed back papers. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *