உன் கண்கள்!
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (18)
உன் கண்கள்!
(பாடல்)
உன் கண்கள்! அதில் மலரும்
என்னெஞ்சம்! அதில் சிரிக்கும்
உன் கண்கள்! வாழ்க்கை இதே!
தீபங்கள்! தினம்தினமும்
தீ வேண்டும்! எனக்கென்றும்
நீ வேண்டும்! நீதான் வேண்டும்!
அருகினில் உருகுகிறேன்
தொலைவினில் மருகுகிறேன்
ஒருகணம் பலயுகமாய்
உதிர்ந்துதிர்ந்து ஏங்குகிறேன்! (உன் கண்கள்)
காற்றோடு தவழ்ந்துவரும்
கனவென்றன் பூநெஞ்சம்
சொல்லாத கவிதை போலே
சோதிக்கும் உன் பாதம்
பாதத்தில் சேரும் வரை
பனித்துளியும் பாரம்
நில்லாமல் உன்னில் தீர
என்றுவரும் நேரம்?
ஊரில்லை! உயிரன்றிப்
பேரில்லை! உறவன்றி
வேறில்லை! விந்தையிதே!
உன்வார்த்தை போதாது
உன் மெளனம் தாங்காது
இவையன்றி வேறேதும்
என்னெஞ்சம் ஏங்காது!
வாழாமல் வாழ்கின்றேன்
வளராமல் கரைகின்றேன்
உன்வாசல் ஓரத்தில்
ஒரே கீதம் பாடுகிறேன்!
நீயின்றேல் ஒருதுளியும்
நானில்லை! ஒருதுளியும்
நானிருந்தால் நீயில்லையே!