இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (19)

வருவாயா?

{கேட்டு மகிழ}

10486783_299956013508635_266905490165609309_n

என்றோ பெய்யும் மழையின்

ஏதோ ஒரு சிறு துளி

எப்படியோ மண்ணில் நுழைந்து

விதையின் கதவைத் தட்டி

விழியோடு விழி பேசலாம்

பரந்து விரியும் சோலைக்குப்

பரிசம் போடலாம்

 

விலக்க முடியாத இருளில்

விழிக்க முடியாத விழிகள்

வெறித்துக் கிடக்கும்போது

ஏதோ ஒரு கரம் கூந்தலை விலக்க

நெற்றி தெரிவதுபோல்

நேருக்கு நேரே நேர்ந்து விடலாம் விடியல்

 

ஊமையின் நெஞ்சுக்குள்

ஊசியாய் மின்னலொன்று

உயிர்சிலிர்க்க நுழைந்தபின்னும்

உதடு பிரிக்க முடியாமல் துயருறும் போது

வானம், என்றோ கேட்ட

கானத்தை நினைத்துக்கொண்டு

சற்றே சிலிர்க்க

வயிரங்களெல்லாம் வார்த்தைகளாகலாம்

 

இப்படித்தான்

இப்படியேதான் நானும்……..

 

வந்துவிடுவாய்தானே?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *