கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“படுகளம் நீங்கி, பயத்தினால் மோட்ஷ,
விடுதலை கேட்கும் விஜய! , -கெடுதலிதைப்,
போலெதுவும் இல்லை, புறமுதுகு காட்டலென்றான்,
நீலமது சூதன் நகைத்து”….கிரேசி மோகன்….
“தன்னை மறந்தவன் தாண்டவம் ஆடினும்,
பொன்னை விடாது பிடிக்கின்றான், -அன்னை,
அணிவித்த மாலை, அவதார ரக்ஷை;
அறிவிக்கின் றானோ அரி”….கிரேசி மோகன் ….