கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
டியர் கேசவ் , வியாழக் கிழமை ஸ்ரீ ராகவேந்திரர் திருவல்லிக் கேணி கோயிலுக்குச் செல்வது வழக்கம்…. அதிகாலையிலிருந்து ராகவேந்திரர் மீது வெண்பா யோசித்துக் கொண்டிருந்தேன்….முதல் இரண்டு வரிகள் வந்தும் முற்றுப் பெறாமல் தவித்த போது அடுத்த இரண்டு வரிகளை உங்கள் ஓவியம் தந்தது….மூலராமன் கோல கண்ணனாய் வந்தான் ….இன்றைய இந்த ஆச்சரியம் போதும் ….நன்றி கேசவ்….
“ஆகவேண்டி செய்ததெல்லாம் ஆச்சு ,அலைகின்ற,
தேகவாஞ்சை போச்சு ,திடமனதை, -ராகவேந்த்ரா,
கற்பகம் ,காமதேனு ,கண்ணன் வியாழனில்
அற்புதச் சேர்க்கை அளிப்பு”….கிரேசி மோகன் ….
“மாமதனம் செய்கையில் ,மந்திர மேருதாங்க,
ஆமைதன் ரூபமுற்ற அச்சுதா, -காமதேனு,
கற்பகக் கண்ணனுன்போல் கேசவ் வரைந்தது,
சொற்பதத்துள் சிக்காத சித்து”….கிரேசி மோகன்….
மாமதனம் -மிகப் பெரிய கடைதல்….