கே. ரவி

 

ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையில், சுஜாதா குரலில் கேட்கலாமே:

 

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

 

Meerabai_1

 

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பாடல்களில் உயர் பாடலிதே

நிஜமும் நிழலும் நிதர்சன மாகும்

நித்யா னந்த கீதமிதே

 

உடலும் உயிரும் உறவென் றெண்ணும்

மடமை அழிக்கும் மார்க்கமிதே

கடவுள் நாமம் கடவுள் த்யானம்

கதிவே றில்லை மானிடனே

 

ஆசைகள் ஆகும் ஓசைகள் யாவும்

அடங்கிடும் தேவ மந்த்ரமிதே

பாசச் சுழலில் மோகத் தழலில்

பரிதவிக் காதே மானிடனே

 

மறுபடி ஜனனம் மறுபடி மரணம்

மதியில்லை யாசொல் மானிடனே

உறுதுணை அவனே உயிர்நிலை அவனே

உணர்ந்திடு வாயா நீயுடனே

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *