கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“முலைப்பாலை எண்ணி மடியில் படுத்து,
அலைபாய, அன்னை அளித்த, -துளிப்பாலை,
உண்ண மறுத்தனன்; “ஊட்டிக்கே ஆப்பிளா”போல்,
“கண்ணனுக்கே சங்கா” கருத்து”….கிரேசி மோகன்….
கேசவ் OIL PAINTING கண்ணனுக்கு தைலக் காப்பு….
“நள்ளிரவு வண்ணனை, வெள்ளையுறு வாக்கிட,
தெள்ளமுதை வெண்சங்கில் தாயவள், -பிள்ளையதன்,
வாயில் புகட்டுவதை ,வார்த்தனன் கேசவ்ஜி;
OILலில் ஆரா அமுது”….கிரேசி மோகன்….
யசோதை பிடியிலிருந்து தப்ப முயலும் “கிருஷ்ண உவாச”….
“என்னதவம் செய்தாலும் என்னப்ப்ர யோஜனம்,
முன்னமிவன் செய்த முடிவம்மா, -உண்ணதவம்,
நோற்றவள் பூதனை, நச்சுமுலை யோடெமுனை,
ஆற்றருகே WAITING அனுப்பு”….கிரேசி மோகன் ….