இன்னும் என்னை……
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (32)
இன்னும் என்னை..
(பாடல்)
இன்னும் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
அன்பே என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
உன்விழியின் ஊஞ்சலிலே என்னெஞ்சம் உயிர்தேடும்
காலையும் மாலையும் நினைவின்றி
கனவும் நினைவும் துணையின்றி
புல்லின் நுனியில் பனிபோலே
துளித்துளியாய் நான் கரைகின்றேனே (இன்னும் என்னை)
கார்த்திகை தீபம் எந்தன் மனம்
தவழும் தென்றல் உந்தன் மனம்
அணைப்பாயா? இல்லை அணைப்பாயா?
அழகிய கைகளில் எடுப்பாயா?
பார்வையில் உயிரை நிறைப்பாயா? என்னைப்
பாதையில் மலராய் இறைப்பாயா?
தவிப்பே தவமாய்க் கனல்கின்றேன், ஒரு
தவத்தின் முனையில் கரைகின்றேன் (இன்னும் என்னை)
வெற்றியும் தோல்வியும் ஏதுமில்லை
வேதனை சாதனை பேதமில்லை
காதலெனும் ஒரு போதையிலே, மனம்
கலந்தபின்னே உயிர் மீதமில்லை
இதுதான் தருணம் வருவாயா?
எனக்கொரு ஜனனம் தருவாயா?
மலரில் பனித்துளி பழியில்லையே!
மெளனம் மரணத்தின் மொழியில்லையே! (இன்னும் என்னை)
படத்திற்கு நன்றி