என்னத்தைச் சொல்ல! – 1
இன்னம்பூரான்
‘The Devil quoting the Bible’ என்ற ஆங்கில சொலவடை இப்போது நினைவில் வருகிறது. என்னத்தைச் சொல்ல! பங்கு சந்தையில் புகுந்து கன்னா பின்னா அழுகுணி ஆட்டம் ஆடி ரூ.5600 கோடியை ஸ்வாஹா செய்த வினை NSEL & MCX-SX என்ற அபூர்வ சகோதர கில்லாடிகளை சார்ந்தது. அவற்றின் பிதாமஹராகிய ஜிக்னேஷ் ஷா சிறையில் அடைக்கப்பட்டார். நடந்ததை மறந்து எங்களுக்கு புதிய அவதாரத்துக்கு நாமகரணம் செய்ய வேண்டும் என்று அனுமதி வேறு கேட்டிருக்கிறது, MCX-SX. ‘அதெல்லாம் சும்மா உளவாங்காட்டிக்கு. ஆனாலும், அவர்களுக்கு தனியார் துறை ஆடிட்டர் கொடுத்த சான்றிதழ் மீது ஆனானப்பட்ட ஆடிட்டர் ஜெனெரல் கமெண்ட் அடிக்கவில்லை; எனவே நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது உறுதியாச்சு என்று தம்பட்டம் அடித்து ஒரு செய்தி! அரசு முதலீடு பொருட்டு, ஆடிட்டர் ஜெனெரல் செய்யும் இந்த அடுத்தக்கட்ட ஆடிட், அந்த தனியார் துறை ஆடிட்டர், சட்டரீதியான ஆடிட் செய்துள்ளனர் என்று தான் எதிர்வினை கருத்துத் தெரிவிக்கவில்லை. அதைப் போய் எங்கள் பரிசுத்தத்துக்கு அதுவே சான்று என்பது, ‘The Devil quoting the Bible’. அதாவது, ‘வசிஷ்டர் வாயாலெ பிரம்மரிஷி’ என்பதாகும். இதெல்லாம் ‘இடம்’ தகர்த்து, ‘பொருள்’ பேதம் செய்து, ‘ஏவலை’ திசை திருப்பும் சால்ஜாப்பே.
‘வல்லமையில்’ தணிக்கைத்துறை பற்றி எழுதிய கட்டுரைகளை, கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைத்து, அரசியல் விழிப்புணர்ச்சி பொருட்டு ஒரு தொடராக எழுதலாமா/வேண்டாமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இல்லை, இம்மாதிரியான ‘நறுக்’ போதுமா?