நீ ஒரு கற்பகத் தரு!
-விசாலம்
நிலவாக உன்னை நினைத்தாலோ,
காலை காணாமல் போய்விடுவாய்
மலராக உன்னை நினைத்தாலோ
ஒருநாளில் நீ உதிர்ந்து விடுவாய்,
வானவில்லாக உன்னை நினைத்தாலோ
கணநேரத்தில் நீ மறைந்துவிடுவாய்,
பனித் துளியாக உன்னை நினைத்தாலோ
வெயில்பட மறைந்து விடுவாய்,
அலைகளாக உன்னை நினைத்தாலோ
காலை முத்தமிட்டு ஓடிவிடுவாய்,
மலையாக உன்னை நினத்தாலோ
கல்மனம் போல் நீ மாறிவிடுவாய்.
நீராக உன்னை நினைத்தாலோ
பனிக்கட்டி போல் உறைந்து விடுவாய்,
உன்னை நான் ஒன்றும் நினைக்கவில்லை
எனக்கு நீ நீயாகவே இரு…
என்றும்போல் நீ ஒரு கற்பகத் தரு!