ஆசிரியர் தினம்!
-ரா.பார்த்தசாரதி
மாதா, பிதா, குரு
மூவரும் கண்கண்ட தெய்வம்
அன்பிற்கு அன்னை, அறிவுக்குத் தந்தை
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே!
மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே பெருமை
மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி
ஏணியாய் இருந்தவர்களுக்கு என்றும் ஆசிரியர் எனும் பதவியே!
ஆசிரியர் பணி மகத்தான பணியன்றோ!
அவர்களை நினைவுகொள்வது நமது கடமையன்றோ!
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே!
அவர்தம் பிறந்தநாளே ஆசிரியர் தினமாக அறிமுகமானதே!
அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை
அதிலும் தரமான கல்வியை அளிப்பதே நாட்டின் கடமை
வாழ்க்கையில் கல்வி என்பது மனிதனின் இருகண்கள்
கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதீர்கள்!