கிரேசி மோகன்

crazy1

“பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
வர்ண மகாப்பிரபு வே”…..கிரேசி மோகன் ….

“எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
தூணைப் பிளந்துதெய்வம் தொப்….

குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….

“ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….

ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
கானில் -காட்டில்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *