கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“LOVEஆகி ராதைஆ லிங்கனத் திற்கீடாய்
COWஆன கங்கியைக் கட்டுகிறான்; -இவ்வாறு
பண்பில் உயர்ந்தவன், பெண்,பசு பேதமற்றோன்
அன்பிற்கும் உண்டோ அடைப்பு”….கிரேசி மோகன்….
நமக்கு ஓரே அன்னை கண்ணன்….
MOMஏகம் சரணம் வ்ரஜ(வ்ரஜகுலம் நாம்)….
“கட்டிப் பிடிவைத்யம் கங்கிக்கு ,ஞானியர்
எட்டிப் பிடித்திடா ஏகமவன்; -கொட்டும்
பசூம்பால் பக்திக்கு பேரின்பம் கூட்டும்
வசூல்ராஜா கண்ணன் விரல்”….கிரேசி மோகன்….