கிரேசி மோகன்
crazy
“கோகுலத்தில் ஓர்நாள்ராதை கோபாலன் போலநின்றாள் 
  போர்க்களத்தே போனகண்ணன் PROXYயாய்; -ஆய்க்குலத்தோர் ,
  வந்தோன்ஏன்? பால்மாறி வஞ்சிபோல் குந்துகிறான்!
  சந்தேகம் கொண்டனர் சற்று”….கிரேசி மோகன்….
“ஒர்நாள்ராதை” கனிச்சீர் வெண்பா தளை தட்டுகிறது….
  இருந்தாலும் “இலக்கணம் மாறுதோ” எழுதிய கவியரசு கண்ணதாசனின் கிருஷ்ண             கானத்தில் வரும் “கோகுலத்தில் ஓர்நாள்ராதை” சாகா வரம்பெற்ற வரிகளை சேர்த்து களை கட்டுவதற்காக “இலக்கணம் ஒருக்கணம்” மீறினேன்”….மரபே மன்னிப்பாய்….
டியர் கேசவ்சி ,அன்று போனில் சொன்னீர்கள் கிஷோரை வடநாட்டில் கிஷோரி என்று ராதையின் அம்சமாக கொண்டாடுவதாக….இன்றைய கண்ணனிடம் நளினம் சற்று தூக்கலாகத் தெரிகிறது….ஆண்பால் பெண்பாலாக பால்மாறி….OKதானே….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *