காந்தி நாமம் வாழ்க!
அக்டோபர் பெட்டகம்
ஷைலஜா
அகிம்சையை போதித்தவர்
இன்பக்குறுநகையை
இதழினில் கொண்டவர்
சத்தியப்பாதையின்
சாந்தத்தலைவரவர்
உத்தமப்பணியினில்
கொள்ளையர்போல் வந்த
வெள்ளையர் ஆட்சியை
மெள்ள மெள்ளவே
கிள்ளிக்களைந்தவர்
இன்றுநமக்குள்ள
இவராலன்றோ
இங்குக்கிடைத்தது!
பின்னைத்தலை முறைக்கும்
பெட்டகமாயிருக்கும்
அன்னவரை நாம்
என்றும் வணங்குவோம்!
தென் ஆஃப்ரிக்காவில் தான் முதலில் தமிழ் மொழியைக் கற்றுப் பிறகு, அங்கு வாழும் தமிழர் குழந்தைகளுக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்துள்ளார் மோகன்தாஸ் காந்தி.
வரலாறு முக்கியத்துவம் உள்ள அவரது தமிழ் எழுத்துக்களை வல்லமையில் இட்டமைக்குப் பாராட்டுகள் ஷைலஜா.
சி. ஜெயபாரதன்