-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

    muvaஇலக்கியத்தை இலக்கணத்தை
    இங்கிதத்தை நானறிய
    நிலைத்தவொரு அறிஞரென
    நின்றிருந்தார் ’முவ’வே !

    தலைக்கனமும் இல்லாமல்
    தனதுநிலை பிறழாமல்
    எடுத்தபணி செய்தனரே
    எங்களது ’முவ’வும்!

    தனித்தமிழால் கதைகள் சொன்னார்
    தரமுடைய நாவல் தந்தார்
    பொறுப்புடனே தமிழ் படித்தார்
    பொறுமைநிறை ’முவ’வும்!

    மொழிநூலை நான்கற்க
    முன்னானார் ’முவ’வும்
    தெளிவாகத் தமிழெழுத
    சிறந்தகுரு ஆனாரே!

    எங்கள்தமிழ் இலக்கியத்தை
    எல்லோரும் அறிவதற்காய்
    எழுதுகின்ற பணிதன்னை
    ஏற்றவரும் ’முவ’வே!

    பாரததத்தின் பிரதமரே
    பணிகொடுத்து நின்றாரே
    ’முவ’வின் முயற்சியினால்
    முத்தமிழைப் பலர்பார்த்தார்!

    அமுதத் தமிழ்மொழியை
    அரவணைக்க வழிசெய்த
    அறிஞராம்  ’முவ’வை
    ஆண்டாண்டு போற்றிடுவோம் !

    ’முவ’வின் பெயர்கேட்டால்
    யாவருமே தமிழ்படிப்பார்
    தாமாகக் கற்றுணர்ந்து
    தலைநிமிர்ந்து நின்றாரே!

    சாவாத மருந்தெனவே
    தரமுடைய நூல்களெலாம்
    ’முவ’வின் மதியினின்று
    முகிழ்த்தெழுந்து வந்தனவே!

    ஆலமரமாக அவரிருந்தாரப்போது
    அவருடைய நிழலினிலே
    அறிஞரெலாம் இருந்தனரே
    ஞாலமெலாம் சென்றுஅவர்
    நம்பெருமை சொன்னாரே
    சீலநிறை ’முவ’வை
    சிந்திப்போம் எந்நாளும்!

   {இன்று (அக்டோபர் 10) மு.வரதராசனாரின் நினைவு நாள்.}

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *