-செண்பக ஜெகதீசன்
குப்பை பொறுக்கும் சிறுவனுக்குக்
காகிதத்தில் தெரிவதில்லை
கவிதை…
தெரிந்தது அவனுக்கு,
காகிதமே கவிதையாக-
அறிவுப் பசிக்கு அல்ல,
வயிற்றுப் பசிக்கு…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…