கவியரசர் நினைவுநாள் நினைவாக
சக்தி சக்திதாசன்
எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியரசரின் நினைவுநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.
ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
காசைவிட எது பெரிது?
“தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா
சம்சாரி என்றறியுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்குமுன அறிய வேண்டும்!
காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று
கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற
கன்னிமலை யரசி துணையே!”
-கவியரசர் க்ண்ணதாசன்-
தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது நண்பர்கள் தான் பெரிதென்ற எண்ணத்தை நிலைநிறுத்துமாறு எத்தனை பவ்வியமாக வேண்டுகிறார் பார்த்தீர்களா?
கண்ணதாசன் அவர்கள் நண்பர்கள் பலரென்று நம்பியவர்களாலே ஏமாற்றப்பட்டவர். வெளுத்ததெல்லாம் பால் எனும் எண்ணம் கொண்டவர். ஆயினும் அவரது மனதில் நட்பை அதாவது உண்மையான் நட்பை பெரிதாக எண்ணும் சிந்தை எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கிறது பார்த்தீர்களா?
காதல் என்னும் அந்த இனிய உணர்வினால் தாக்கப்பட்டோர் அனைவருமே என்றுகூடச் சொன்னால் தவறாகாது.
அந்தக் காதல் உணர்வு மனதில் கொடுப்பதோ இன்பவேதனை. அந்த வேதனையைச் சொல்லில் வடிப்பது அதைவிட வேதனை.
அத்தகைய ஒரு இன்பவேதனையை எமது இனிய கவியர்சர் எத்தனை இதமாகத் தந்திருக்கிறார் பாருங்கள் !
விருத்தம்:
“நூறுமுறை பிறந்தாலும், நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் – நான் ஒருநாளும்
போவதில்லை, உலகத்தின் கண்களிலே –
உருவங்கள் மறைந்தாலும், ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!’
பாடல்:
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
(ஓராயிரம்)
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம்)
இந்தக் காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையை நாடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
(ஓராயிரம்)”
ஒன்றான உள்ளங்கள் ஒருபோதும் மறைவதில்லையாம். எத்துணை உண்மை இது.
இப்போது உங்கள் மனங்களிலே ஒரு கேள்வி எழலாம், அப்போ ஏமாற்றும் காதலெல்லாம் என்ன? என்று.
இங்கேதான் கவியரசரின் வார்த்தைகளின் உண்மை புரிகிறது. அப்படிப்பட்ட ஏமாற்றும் உள்ளங்கள் ஒருபோதுமே ஒன்றாவதில்லை.
மானைடர் காதலையும், மலர்களின் வாசத்தையும் தாண்டி ஒரு சரித்திரம் படைக்கும் காதலைக் கையோடு கூட்டிவருகிறார் கவியரசர்.
சாந்திநிலையம் என்னும் படத்தில் குழந்தைகளை வைத்து மறைந்த நடிகர் திரு.நாகேஷ் அவர்கள் பாசுவதாக அமைந்த ஒரு பாடல்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கைகளில் தான் தங்கியுள்ளது என்பதனை இத்தனை எளிதாகச் சொல்லக்கூடியவர் நமது கவியரசர் தான்.
படம்: சாந்தி நிலையம் – வருடம் 1969
இசை: M.S. விஸ்வநாதன்
நடிப்பு: ஜெமினி கணேசன், காஞ்சனா,மஞ்சுளா, நாகேஷ்
பாடல் வரிகள: கவியரசர் கண்ணதாசன்
“பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ?
நினைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே!
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்
உலகம் போகின்ற வேகம்
உருவமும் இனிமேல் மாறும்
நடக்கும் கதைகளைப் பார்த்தால்
நமக்கே சிறகுகள் முளைக்கும்
ரஷ்யர்கள் அனுப்பிய கூடு
ராக்கெட் என்பது பேரு
சிஷ்யர்கள் அனுப்பிய கூடு
தெரியுது வானத்தில் பாரு!
பாடலைக் கேட்டதுமே நாமும் வானத்தில் கைகளை விரித்துக் கொண்டு பறக்கலாம் போல ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.
அப்பப்பா ! இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு இருக்கிறதே ! அதை எப்படி வீளக்க முடியும்?
மனம் என்பது மேடையாம், அந்த மேடையிலே ஒரு ஆட்டம் நடக்கிறதாம் போங்கள். அது யாரென்று நினைக்கிறீர்கள் அவனுடைய/அவளுடைய மனதைக் கொள்ளை கொண்டவருக்குரிய முகமாம்.
மற்றொரு வகையில் சொன்னால் காதல் வயப்பட்டவர் தூங்க முடியாமல் தவிப்பார் என்கிறார் கவியரசர்.
அந்தப் பெண் என்ன செய்கிறாளாம்….. தமிழழென்பது காவ்இரி போல வற்றாது ஓடிக்கொண்டிருக்கும் நதிதானே ! இவள் தமிழ்மகள் எப்படியான தமிழ் மகள்?காவிரி போன்ற வற்றாத தமிழ் நதிய்இல் நீராடி வந்த தமிழ்மகள்.
அது மட்டுமா?
இயற்கை வனத்தில் காதல் மலர் பறித்து தனது விழிகளில் சூடிவிட்டாளாமே போங்கள் …..
ஒருபூச்சரம் எப்படி வளைந்து, வளைந்து ஆடுமோ ? அப்படி அவளது அழகிய உடல் ஆடுகிறதாம், அந்த உடலுடன் ஓடி ஆடி விளையாடுவது அவனுக்கு பொன்னுடன் விளையாடுவது போல பெருமையளிக்கிறதாம்….
என்ன கற்பனை கவியரசருக்கு ?
அவள் அவனோடு வந்து பேசுவது சிலை உயிர் பெற்று வந்து பேசுவது போலல்லவா இருக்கிறது.
விழி, விழியுடன் கலப்பதும்… இதழ் இதழுடன் கலப்பதும்…. இஅவர்களின் காதல் களியாட்டத்தைக் கண்டதும் இரவு ராணியான நிலவின் உறவாடலில் கூட சுவை சேர்ந்து விடுகிறதாம்…..
சரி இனி பாடலைப் பார்ப்போமா ?
படம் : வல்லவனுக்கு வல்லவன் – 1965
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா
நடிகர்கள் : ஜெய்சங்கர், அசோகன், மணிமாலா
“மனம் என்னும் மேடையின் மேலே
முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
மனம் என்னும் மேடையின் மேலே
முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
(மனம்)
தமிழ்க் காவிரி நீராடி இருவிழியில்
காதல் மலர் சூடி
வண்ணப் பூச்சரம் போலாடி உடலழகில்
பொன்னுடன் விளையாடி
சிலை ஒன்று நேரில் வந்து உயிர் கொண்டு பேசுது
கலைத் தென்றல் வீசுது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
(மனம்)
விழி மேலொரு விழி சேர்த்து பருவக்கலை
மேனியில் கை சேர்த்து
கனி இதழுடன் இதழ் சேர்த்து வெண்ணிலவின்
இரவுக்கு சுவை சேர்த்து
சிலை ஒன்று தேரில் வந்து எனைக் கொண்டு சென்றது
துணை தென்றல் ஆனது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
(மனம்) “
அன்பு நெஞ்சங்களே கவியர்சரின் நினைவு தினத்தில் அவரின் நினைவுகளோடு உங்களுடன் உறவாட நினைத்ததின் பலனே இப்படைப்பு.
அன்புடன்
சக்தி சக்திதாசன்