கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
சாகரம்சூழ் பாரம், சரிகட்ட வந்தவன்முன்,
வ்யாகரணம் விட்டு வணங்கிநில், -மாகன,
சம்சாரப் பானையை, சுக்குநூ றாக்கிடும்,
அம்ஸா வதாரன் அவன்”….கிரேசி மோகன்….
வ்யாகரணம் -இலக்கணம்..
நந்த வனத்து நவனீத ஆண்டியவன்,
மந்திரத்தால் ஆய்ச்சி மயங்கவைத்து, -அந்தரத்தில்
தொங்கும் அகந்தையை தூரக் கடாசியதில்,
தங்குவெண்ணை ஆன்மனைத் துய்ப்பு’’….கிரேசி மோகன்….
நந்த வனத்து நவநீத ஆண்டி-நந்தகோபன் குமாரன்….
துய்ப்பு -நுகர்தல்