நாகேஸ்வரி அண்ணாமலை

சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பலருக்குப் பெரியாரைப் பற்றி நல்ல புரிதல் இல்லை போல் தெரிகிறது. முடிந்த அளவு பெரியாரைப் பற்றிய சரியான கணிப்பைக் கொடுக்க முனைந்ததின் விளைவே இந்தக் கட்டுரை. பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாத இளம்தலைமுறையினருக்கு ஒரு முன்னுரையாக அமையும்.

பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1879-இல் ஈரோட்டில் ஒரு பணக்கார வணிகரின் மகனாகப் பிறந்தார். அவருடைய சிறு வயதில் வைஷ்ணவப் புரோகிதர்கள் சிலர் அவர் வீட்டிற்கு வந்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு அவருடைய தந்தையின் விருந்தோம்பலை அனுபவித்துவிட்டுச் சென்றனர். அப்போதிலிருந்து பெரியார் பிராமணர்களுக்கு ஏன் இத்தனை உபசாரம், ஏன் இத்தனை மதிப்பு என்று எண்ண ஆரம்பித்தார். அவர்கள் செய்தது அத்தனை பெரிய காரியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போதே பிராமண எதிர்ப்பு அவர் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. வயது வந்தபிறகு ஒரு முறை காசிக்குச் சென்றபோது பிராமணர்களுக்கு உணவளித்த இடத்தில் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்ற காரணத்திற்காக இவருக்கு உணவு வழங்கப்படவில்லை. அன்றிலிருந்து சமூகத்தில் ஏன் பிராமணர்களுக்கு உயர்ந்த இடம் என்று ஆராய ஆரம்பித்தார்.

பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கலந்துகொண்டார். சேரன்மாதேவியில் இருந்த குருகுலப்பள்ளியில் பிராமண மாணவர்களுக்கும் பிராமணரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டதை எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பெரியார் பிராமணரல்லாத ஒருவரை ஆதரித்தார். ஆனால் காங்கிரஸில் இருந்த பல பிராமண வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்த பிராமணர் ஒருவர் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸில் பிராமணரல்லாதவர்களின் செல்வாக்கு ஒரு போதும் ஏற்படப் போவதில்லை என்று முடிவுசெய்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

சமூகத்தில் மிகுந்த ஏற்றத்தாழ்வு இருப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதையும் உணர்ந்து எல்லோரும் சமம் என்ற உண்மையையும் எல்லோருக்கும் சுயமரியாதை வேண்டும் என்பதையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். ஆண்டாண்டு காலங்களாக சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படித்து இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அவர்கள் தரகராக இருப்பதை எதிர்த்தார். மதத்தின் பெயரால் – கடவுளுக்கு மிக அருகில் பிராமணர்கள்தான் இருக்கிறார்கள் என்று பலரையும் எண்ணவைத்து – பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதை மாற்ற முயன்றார். இதைத்தான் பிராமண எதிர்ப்பு என்று இன்றும் பலர் எண்ணுகின்றனர். மதத்தின் பெயரால் பிராமணர்கள் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்ததால் இந்து மத எதிர்ப்பை ஆரம்பித்தார். மூட நம்பிக்கைகளில் ஒன்று பிராமணர்களுக்குத் தானம் செய்து தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடலாம் என்பது. வாழ்க்கையில் எல்லா அட்டூழியங்களும் புரிந்துவிட்டு கோவிலில் காணிக்கை செலுத்தி இறைவனை ஏமாற்றிவிடலாம் என்பது இன்னொன்று.

காலனீய காலத்தில் அரசுப் பதவிகளிலும் சட்டம், கணக்கு, மருத்துவம் போன்ற உயர் தொழில்களிலும் சிறுபான்மையராக இருந்த பிராமணர்களே ஆதிக்கம் செலுத்திய நிலை மாறி பெரும்பான்மையோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்றும் நினைத்தார். ஜாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்ததால் ஜாதி ஒழிப்பையும் தன் கொள்கைகளில் சேர்த்துக்கொண்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு பிராமணரே கூறியதைப் போல்தான் பெரியாரும் ஜாதிகளை ஒழிக்க முயன்றார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, மத ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பவை இப்படிப் பிறந்தவைதான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று. கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் எல்லோரும் பிறப்பில் சமம். மூடப் பழக்க வழக்கங்களை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கு மிகவும் முயன்றார்.

எல்லோரும் சமம் என்று கூறியபோது பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றார். விதவை மறுமணம், பெண்கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சமூகத்தில் ஒரு சாரார் தாழ்ந்த நிலையிலும் ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் இருக்கும் அவலத்தை மாற்றிச் சமூக நீதி ஏற்பட்ட பிறகுதான் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று நினைத்ததால்தான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் முன் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். ஏற்கனவே உயர்ந்த பதவிகளில் இருந்த பிராமணர்கள் பிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்வார்கள் என்று பயந்துதான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய நாளைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும். எப்போதுமே பிரிட்டிஷார் இந்தியர்களை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல.

அரசியலில் ஈடுபட்டு பணம் நிறைய சம்பாதித்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கவில்லை. மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும், பிராமண ஆதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக உள்ள மதத்தையும் ஒழிக்க வேண்டும், ஜாதிகள் ஒழிய வேண்டும், சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே பெரியாரின் கொள்கைகளின் அடிப்படை.

பதிவாசிரியரைப் பற்றி

35 thoughts on “பெரியார் என்ன செய்தார்?

  1. நன்றி அம்மா.  உண்மையில் பலருக்குப் பெரியாரின் அருமை புரிவதில்லை.  சுருக்கமான, நல்ல பல முக்கியக் கருத்துக்களையும் தொகுத்துவிட்ட நல்லதொரு கட்டுரையை வழங்கியதற்கு நன்றி.  

    சென்ற வாரக் கட்டுரையில் எனக்கு எவ்வொரு குழப்பமுமில்லை.  அடிப்படையாக தன்மைதிப்பினை மக்களுக்கு உணர்த்த எழுந்த இயக்கத்தின் வழி வந்த கட்சி ஒன்று மக்கள் தடால் தடால் என்று காலில் விழுமளவுக்கு தன்மைதிப்பற்ற கூட்டத்தை உருவாக்கி விட்டதையும் …

    சிந்தித்து உண்மையை அறிய சொன்ன  இயக்கத்தின் வழிவந்த மக்கள் சிந்திக்கும் திறனின்றி, குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் நீதித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு சிந்தனையற்றுப் போனதையும்..

    என இரு முக்கியக் காரணங்களை முன்வைத்து கண்டித்தது அக்கட்டுரை. எனக்கும் பெரியாரின் போராட்டம் எல்லாம் வீணாகப் போனதே என்ற ஆயாசம்தான் அடிக்கடி தோன்றுகிறது. 

    அக்கட்டுரையைப் புரிந்து கொள்வதில் எனக்கு எந்த ஒரு சிரமும் இருக்கவில்லை.  தொடர்ந்து வழங்கும் உங்கள் கட்டுரைகள் யாவையுமே  நான் விரும்பிப் படித்து வருகிறேன். தொடருங்கள். 

    மிக்க நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  2. பெரியார் என்ன செய்யவில்லை என்பது என் கேள்வி.

    முது வயதுப் பெரியார் தனக்குப் பணிசெய்ய வந்த இள வயதுப் பெண்மணி  மணி அம்மையாரைச் சொத்துரிமைக்காக மணந்ததை, அண்ணாத்துரை போன்ற பெரியாரின் பிரதான சீடர்களே எதிர்த்து, வெறுத்துத் திராவிடக் கட்சியிலிருந்து பிரிந்து போய் திராவிட முன்னேற்றக் கட்சியை ஆரம்பித்தனர்.  

    பெரியார் பிரிவைத் தடுக்க ஏதும் செய்யாது தி.மு.க. வைக் கேலி செய்து வந்தார். அண்ணாத் துரைக்குப் பிறகு தி.மு.க இரண்டாகி கருணா தி.மு.க. வாகவும், எம்ஜியார் தி.மு.க. வாகவும்  பிளவு பட்டது. இப்போது எம்ஜியார் தி.மு.க. மாறிப் போய் ஜெயலலிதாவின் அம்மா தி.மு.க. வாகப் புதிய பாதையில் போகிறது.  

    அரசாங்கத்தில் நேரடியாக ஈடுபடாத பெரியாரின்  திராவிட கட்சியே  ஒற்றுமை யின்றி இப்படிச் சிதைந்துபோய் இரண்டு, மூன்று போட்டிக் கட்சிகளாய்ப் பிரிந்து அரசியல் சண்டைகளில் ஈடுபட்டு நீதி மன்றங்கள் தண்டித்துத் தமிழ்நாட்டில் / இந்தியாவில் நிலையற்ற கொந்தளிப்பு ஆட்சியை மாறி, மாறி திராவிட முன்னேற்றக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. 

    பெரியார் தமிழர்களிடையே உள்ள சமூகக் குறைபாடுகளை எடுத்துக் கூறினாலும் ஒற்றுமை உண்டாக்கும் நீதி நெறிகளைப் பரப்ப வில்லை. செய்து காட்டவும் இல்லை. தமிழருக்குள் பெரும் பிரிவுகள் உண்டாவதை அவர் தடுக்க வில்லை

    சி. ஜெயபாரதன்.  

  3. திருமதி நாகேஸ்வரி அண்ணமலை அவர்கள் பெரியார் என்ன செய்தார் என அவர் செய்த அரசியலை , முக்கியமாக ஈவெரா காங்கிரஸ் ஆதரவாக அல்லது எதிராக ஏன் என்ன செய்தார் என ஈவெரா ஆதரவாளர்கள் பார்வையில் எழுதியுள்ளார். அதை நான் அலசப்போவதில்லை , ஏனெனில் அது கட்சிப்பார்வை, ஒரு காலும் இண்டெர்நெட் வாதங்களால் மாத்த முடியாது. மேலும் அது 80 வருட முன் அரசியலை பற்றி ஒரு பார்வை வைக்கிறது, அதை இப்போது அலசி ஒரு பயனும் இல்லை.

    “ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று ” என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது ? தமிழ் காட்டுமிரண்டி மொழி, அதை கைவிட்டு ஆங்கிலத்தில்தான் குடும்பங்களுக்குள் பேச வேன்டும், தமிழ் மரபும், இலக்கியங்களும், பரம்பரைகளும் காட்டுமிரண்டிதான் என 40-50 வருடங்கள் ஓயாது பிரச்சாரம் செய்து, அதையும் பெருமையுடன் சொன்னவதான் சுயமரியாதையை அதிகரித்தவர் என நம்ப முடியவில்லை. சரி தமிழர் பண்பாடுதான் காட்டுமிரண்டி என்றால் , அதன் தீர்வு என்ன ? பிரிட்டிஷ் காலனீயத்தை கைவிடக்கூடாது. உலகம் முழுவதும் பல நாடுகள் ஐரோப்பிய காலனீயத்தை எதிர்த்து போராடும் போது,ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை ஆதரித்தது எவ்வகையில் பகுத்தறிவு, எப்போது சுயமரியாதை ஆனது. ஈவெராவின் சிந்தனைகள் 19ம் நூற்றாண்டு காலனீயத்தால் உண்டாக்கப்பட்ட்வை. இதை திரும‌தி நா.அ. “இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும்” என‌ சால்ஜாப்பு சொல்ல‌ முடியாது. அப்ப‌டியென்றால் “ச‌மூக‌நீதி” என்ற‌ போர்வையில் என்ன‌ வேன்டுமானாலும் சொல்ல‌லாம், அன்னிய‌ர்க‌ளின் காலை பிடிக்க‌லாம், சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதும், அவ‌ர்க‌ள் திற‌மை மீதும் மொத்த‌ அவ‌ந‌ம்பிக்கை வைக்க‌லாம் . அது என்ன ஈவெரா பிராண்டு “சமூகநீதி” – தமிழர்கள் தங்கள் மரபிலும், மொழியிலும் பூரண அவநம்பிக்கை வைக்க வேண்டும், என்ன ஈவெரா பிராண்டு “சமூகநீதி” அரசியல் சுதந்திரம் வேண்டாம் என்பது? ம‌ற்ற‌ நாடுக‌‌ளில் அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரை சுத‌ந்திர‌ம் அடைந்த‌வுட‌ன் தூக்கில் இட்டுருப்பார்க‌ள். “ஜ‌ன‌நாய‌க‌” அமெரிக்க‌ நாடுக‌ள் பிரிட்ட‌னுட‌ன் போரிட்டு 1782ல் சுத‌ந்திர‌ம் அடைந்த‌வுட‌ன் , ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பிரித்தானிய‌ முடிய‌ர‌சின் ஆத‌ரவாள‌‌ர்க‌ள் க‌ன‌டாவிற்க்கு உயிருக்காக ஓட‌ வேண்டியிருந்த‌து.

    ச‌ரி அது போக‌ட்டும், சமூக‌‌த்தில் எவ்வ‌ள‌வோ அச‌டுக‌ள் உள்ள‌ன‌ர் ; 50 வருடம் முன் இருந்த அசடுகளை இப்போது நினைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை அப்ப‌டிப்ப‌ட்ட‌ அச‌டுக‌ளை ஏன் தோள்மேல் தூக்கி பெரியார் என‌ துதி பாட‌ வேண்டும்? அதுதான் என் கேள்வி , என் எதிர்ப்பு . ப‌குத்த‌றிவின் முத‌ல்ப‌டி ஒரு ம‌னித‌னை ம‌னிதாக‌ பார்க்க‌ வேன்டும், அதை விட்டு த‌மிழ‌ர்களின் சுய‌ ம‌ரியாதையை குலைத்த‌ ஒருவ‌ர்தான் பெரியாரா?

    ஈவெராவின் அர‌சிய‌ல் வாரிசு விழுமிய‌ங்க‌ள் என்ன‌ ? உண‌ர்ச்சி மிக்க‌ கோஷ‌ங்க‌ள் ; அரசியல், சமூக சகிப்பின்மை , மற்ற‌ கருத்து உடைய‌வ‌ர்க‌ளை ஜாதி அடிப்ப‌டையில் தாக்குவ‌து; ஒரு ப‌க்க‌ம் ஜாதிக‌ள் இல்லை என்ற‌ கூச்ச‌ல், ம‌று ப‌க்க‌ம் ஜாதி ச‌ர்ட்டிபிகேட்டுக‌ள் தான் க‌ல்வி, ப‌த‌வி, ப‌த‌வி உய‌ர்வு ஆகிய‌வ‌ற்ரை நிர்ண‌யிக்கும் என்ற‌ நிலை; இதை ம‌றைக்க‌ அதீத‌ ஹிபாக்ர‌சி , த‌னிம‌னித‌ துதி , இவைக‌ள்தான்.

    த‌க்கார் த‌க‌விலார் அவ‌ர‌வ‌ர் எச்ச‌த்தால் அறிய‌ப்ப‌டும்

    என்ப‌து திருக்குற‌ள். ஈவெராவின் அரசியல் எச்ச‌ங்க‌ள் ஈவெராவை அடையாள‌‌ம் காட்டுகிற‌‌ன‌.

    ஒரு சின்ன‌ உதார‌ண‌ம் : ஈவெரா ப‌க்த‌ர்க‌ள் “ஐ.நா. ஈவேரா பெரியாரை தென்கிழ‌க்கு ஆசியாவின் சாக்கிர‌டீஸ் என‌ அறிவித்து விட்ட‌ன‌ர்” என‌ பெருமையாக‌ சொல்லி வ‌ருகின்ற‌ன‌ர். இந்தியா தென் ஆசியாவில் இருக்கு; தென் கிழ‌க்கு ஆசியாவில் அல்ல‌; ஆனாலும் இந்த‌ முர‌ணைப் பார்க்காம‌ல் ப‌க்த‌கோடிக‌ள் “ஐநா ப‌ட்ட‌த்தை” பெருமையாக‌ பேசுகின்ற‌ன‌ர்.

    வ‌ன்பாக்க‌ம் விஜ‌ய‌ராக‌வ‌ன்

  4. உயர்திருவாளர்கள் ஜெயபாரதன், மற்றும் விஜயராகவன் அவர்களே,

    நான் சொல்ல நினைத்தை, அவை அடக்கம் காரணம் கருதிச் சொல்லாமல் இருந்ததைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

  5. I do not propose to endorse or challenge nageswari annamaki’s views on periyar. However i would rest saying that even after barathi such things are happening. K Ravi

  6. பெரியார் செய்த மாபெரும் தவறு திராவிட நாட்டுப் பிரிவினைப் போராட்டம். இந்திய தேச விடுதலை வேண்டாம் என்று முரணாகப் பேசிக் கொண்டு பெரியார், எல்லையே இல்லாத, யார் திராவிடர் என்று விளக்கிச் சொல்லாத, ஒரு கற்பனைத் “திராவிட நாட்டை” உருவாக்கி அது பிரிய வேண்டும் என்று தமிழ் மக்களைத் திசை திருப்பி, பிரிவினை விதைகளைத் தூவி, விடுதலை நாட்டில் தமிழரை ஆரிய / திராவிடராய்ப் பிரித்து சண்டைகள் உண்டாக்கியது.  

    திராவிடர் என்பவர் யார்  ?   திராவிட நாடென்பது எது ?

    சி. ஜெயபாரதன்

  7. அன்பார்ந்த ஜயபாரதன்

    விஞ்ஞானத்திலும்  இதிகாசத்திலும் நீங்கள் கொண்ட ஈடுபாடு இந்த மண்ணில் ஏற்பட்ட சமூக மாற்றங்களில் உங்களுக்கில்லை என்பதை உணர்கிறேன். தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களுல் தந்தை பெரியார் தலையாயவர்.மேலே எழுப்பப்பெற்ற கேள்விகள் அத்தனையும் ஒன்றும் புதிதானவை அல்ல. திரும்பத்திரும்ப பதிலளித்தவைதான். பெரியாரை முழுமையாக உணர அவர் விட்டுச் சென்ற எழுத்துகளே பேசும்..வரலாற்றை புரட்டிவிட்டு  பேசுங்கள்.

    வில்லவன்கோதை

  8. நண்பர் வில்லவன் கோதை,

    பெரியார் ஒரு பெரிய சீர்திருத்தப் பேச்சாளியா இல்லையா என்பது இங்கு தர்க்க மில்லை. பெரியார்தான் தமிழ்நாட்டைச் சீர்திருத்தினார், மற்ற மாநிலங்கள் மூடத் திசையில் போய்க்கொண்டிருக்கின்றன என்று சொல்கிறீர்களா ?  பகுத்தறிப் பெரியார் மட்டும் இருந்ததால் தமிழ்நாடு எந்த விதத்தில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி உள்ளது ?

    ஆன்மீகத்தில் மூழ்கிய விடுதலை இந்தியா  [தமிழ்நாடு உட்பட] சமூக வளர்ச்சி, விஞ்ஞானத் துறையில் முன்னேறி யுள்ளதற்கு அரசியல் சட்டம் / சாசனம் வகுத்த அம்பேத்கார், மத ஒற்றுமைக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும் பாடுபட்ட காந்திஜி, பண்டித நேரு, டாக்டர் ஹோமி பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் அப்துல் கலாம் போன்றோர் காரணகர்த்தாக்கள்.  

    பெரியார் பாராளுமன்ற அரசியல் அமைப்பு / தேர்தல் குடியரசு முறைகளை வெறுத்தவர்.

    சி. ஜெயபாரதன்

  9. முதலில் சக மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமென்பதே தந்தை பெரியாரின்  தனித்த சிந்தனை.எதையும் பகுத்றிவு கொண்டு பார் என்பது அவர் பேச்சு.
    இந்த தமிழ் மக்கள் எவ்வகையிலாவது மற்றவர்களைப்போல முன்னுக்கு வரவேண்டுமென்பது அவர் பேரவா.அதற்காக மொழிமுதற்கொண்டு எதையும் சமரசம் செய்துகொள்ள முன்வந்தவர் அவர்.
    ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சுய சிந்தனைகளோடு இந்த மண்ணில் சுற்றிச்சுற்றி வந்தவர். இறக்குமதி சிந்தனை அல்ல  
    அவர் தோற்றிவைத்த திராவிட இயக்கத்தின்  முன்னும் பின்னும் இந்த தமிழ் மண்ணை உங்களால் காணமுடியுமென்றால் தந்தை பெரியாரின் இடம் உங்களுக்கு தெளிவாக தெரியக்கூடும்.
    ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் ஒளிரும் வரிசை விளக்குகளால் கணிப்பதல்ல.பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள்.தமிழகம் எத்தனை உயரம் என்பது புரியும்.
    இடுப்பிலே துண்டும் காலணி அணியமுடியாத கால்களும் தனிக்குவளை தண்ணீரும் இணையத்தில் வக்கணை பேசி வலம் வரும்  இன்றைய இளையதலைமுறைக்கு வேண்டுமானால் பெரியார்என்ன செய்தார் என்று அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.
    நான் நேசிக்கும் நீங்களுமா.
    சாகும் வரை இந்த தமிழ் மக்ளுக்காக சுழன்றுத்திறிந்த ஒரு பெரும் தலைவரின் வரலாற்றை  அம்பேத்காரும் காந்தியும் என்று ஒரே வரியில்  உங்களால் எப்படி எழுத முடிந்தது..
    வில்லவன் கோதை  

  10. நண்பர் வில்லவன் கோதை ! ///முதலில் சக மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமென்பதே தந்தை பெரியாரின் தனித்த சிந்தனை.எதையும் பகுத்றிவு கொண்டு பார் என்பது அவர் பேச்சு.//// இதைச் சட்ட ரீதியாக மாநிலங்கள் அனைத்திலும் [தமிழ்நாடு உட்பட] நிலைநாட்டியவர் டாக்டர் அம்பேத்கார். பெரியார் அல்லர். காந்திஜியும், அம்பேத்காரும் சாகும்வரை சமூகச் சம மதிப்புக்காகப் பணிபுரிந்தவர்கள்தான். பெரியார் வசித்த தமிழ்நாட்டில் இப்போது பிராமணர் அல்லாத மேற்குடி மக்கள் தாழ்த்தப் பட்டோரை மிதித்துக் கொண்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன ? சி. ஜெயபாரதன்

  11. நண்பர் வில்லவன் கோதை ! ////பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப் பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள். ///// இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ? சி. ஜெயபாரதன்

  12. நண்பர் வில்லவன் கோதை ///இடுப்பிலே துண்டும் காலணி அணியமுடியாத கால்களும் தனிக்குவளை தண்ணீரும் இணையத்தில் வக்கணை பேசி வலம் வரும் இன்றைய இளையதலைமுறைக்கு வேண்டு மானால் பெரியார் என்ன செய்தார் என்று அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.
    நான் நேசிக்கும் நீங்களுமா ? ///// இது தனி மனிதர் கீறல் !!!! என் தந்தையார் இந்திய சுதந்தரப் போராட்டாத்தில் பங்கெடுத்துக் காந்திஜி ராஜாஜி, காமாராஜருடன் சிறை சென்றவர். 1939 இல் தான் நடத்திய சோப் கம்பெனியில் தாழ்த்தப் பட்டோரை ஊழியராக்கி அவரது மண் கலயங்களைக் கண்டு தாங்காமல், மூடியுள்ள ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரங்களை அளித்தவர். பெரியார் இந்திய சுதந்திரத்தை வேண்டாம் என்று வெறுத்தவர். சி. ஜெயபாரதன்

  13. அன்பார்ந்த ஜயபாரதன்
    சமூக நீதிக்கு டாக்டர் அம்பேத்கார், தேசதந்தை காந்தீஜி செய்தது சொல்லியது எல்லாம் பொதுவானவைதாம் அவர்கள் பங்கு தமிழகத்தை பொறுத்தவரை மிகமிகக்குறைவானதுதான். அம்பேத்காரே தந்தை பெரியாரை பெரிதும் மதித்தவர். 
    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் அன்நாளில் கடைபிடிக்கப்பெற்றுவந்த குடிக்கின்ற தண்ணீருக்கு தனிக்குவளை முறைதான் பின்னாளில் திராவிட இயக்கம் எழுச்சிபெற காரணமாயிற்று தந்தை பெரியாரே முன்னின்று நிகழ்த்திய போராட்டம் அது.அவர் வாழ் நாளில் தமிழர்க்காக நிகழ்த்தாத போராட்டங்கள் இல்லை.. அவரை எதிர்த்துப் பேச துணிவுமிக்க தலைவர்களும் அ்ன்றில்லை.அவர் அரசையோ சட்டதிட்டங்களையோ நம்பவில்லை. மக்களுக்கு கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவிட்டால் போதுமென்று நினைத்தார். சாதியும் சமூகமும் இந்த மண்ணில் பக்தியோடு பின்னிக்கிடக்கிறது.என்பதை கண்டவர் பெரியார். 
    அவர் கண்ட பெரும்பாலான கனவுகள் வேறெந்த மாநிலத்திலும் முதலாக தொடர்ந்து கட்டிலேறிய திமுக செய்து முடித்தது.இவைகளுக்கான ஆதரங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது அரசு சட்டமன்ற ஏடுகளிலும் காணக்கிடைக்கிறது.
    36 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிகேஷன் துறையில் பணி செய்தவன் நான் ..கூடங்குளம் சார்ந்த உங்கள் கட்டுரையை பலருடன் பகிர்ந்து
    கொண்டவன்.இணையத்தில் அறிவியலை தொடர்ந்து எழுதும் உங்கள் ஊக்கத்தை பார்த்தவன்.
    இணையத்தில் ஈசல்களாய் படர்ந்து எச்சல் உமிழும் பெரும்பாலான இன்றைய தலைமுறையக்கருத்தில் கொண்டே அந்த வரிகளை குறிப்பிட்டேன்.
    நேருக்கு நேராக விவாதித்தே பல விஷயங்களில் ஒருகோட்டுக்கு நம்மால் வரமுடியவில்லை.உங்களுடைய கல்வியும் நீங்கள் வளர்ந்த சூழலும் என்னிலும் மாறுட்டிருக்கக்கூடும்.
    பெரியார் ஏன் ஒரு பொருந்தா திருமணத்தை செய்தார்
    பெரியார் ஆங்கிலத்தை படிக்கச்சொல்லி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் குறிப்பிட்டார்
    பெரியார் இந்திய சுதந்திரத்தையும் சட்டதிட்டங்களையும் ஏன் வெறுத்தார்.
    நாத்திகரான பெரியார் ஏன் ஆலயங்களில் போராட்டம் நிகழ்த்தினார்
    பெண்ணுரிமைக்காக அவர் கொடுத்த குரல் என்ன
    இவற்றையெல்லாம் பின்னூட்டங்களில் விவாதிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் ஏற்கக்கூடிய பதில்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.
    கொஞ்சம் பெரியாரையும் வாசித்து பாருங்களேன்
    வில்லவன்கோதை 

  14. நண்பர் வில்லவன் கோதை,

    /// மக்களுக்கு கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவிட்டால் போது மென்று நினைத்தார். சாதியும் சமூகமும் இந்த மண்ணில் பக்தியோடு பின்னிக் கிடக்கிறது.என்பதை கண்டவர் பெரியார்./// 

    தமிழ் நாட்டில் செல்வந்தப் பெரியார் இரவீந்திரநாத் தாகூர் போல் தன் காலத்தில் ஒரு கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்க வில்லையே !

    தமிழ்நாட்டில் பெரியார் தீவிர ஒழிப்புக் கொள்கைகளான ஜாதிகளோ, மதங்களோ, தெய்வங்களோ, சமூக ஏற்றத் தாழ்வுகளோ எங்காவது அழிந்து போய்விட்டனவா ?  இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப முழக்கினாரே தவிர எப்படிச் செய்வது என்று வழிமுறைகளோ, விதி முறைகளோ, நெறி முறைகளோ சட்ட ரீதியில் அமைக்க வில்லை.  

    45 ஆண்டுகளாக ஆளும் அவரது திராவிடக் கட்சிகள் இப்போது ஜாதீய ரீதியில் தான் கல்வி, இடத் தேர்வு, நிதிக் கொடைச் சலுகைகள் கிடைக்க முயல்கின்றன. ஆகவே 21 ஆம் நூற்றாண்டில் பெரியார் வெறுத்த ஜாதிகள் எண்ணிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தியாவில் [தமிழ்நாடு உட்பட] ஆழமாய் வேரூன்றிக், கிளைகள் விட்டு, விழுதுகளோடு வலுத்து நிற்கின்றன !

    எனது 80 வயது அனுபவத்தில் பெரியாரைப் பற்றி நன்கு அறிவேன் நண்பரே !

    http://www.tamilhindu.com/2012/08/did-evr-send-telegram-on-poona-pact/

    http://www.tamilhindu.com/2012/04/evrs-reaction-on-venmani-incident/

    சி. ஜெயபாரதன்

  15. “பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள்.” வில்லவன் கோதை

    அப்படிப்பட்ட அட்டவணை எல்லா இந்திய மாகாணங்களிலும் உண்டு. http://en.wikipedia.org/wiki/List_of_Scheduled_Castes_in_Delhi
    http://en.wikipedia.org/wiki/List_of_Scheduled_Castes_in_Uttar_Pradesh
    http://www.indiastat.com/demographics/7/scheduledcastestribes/249/stats.aspx
    http://socialjustice.nic.in/pdf/tab210.pdf
    http://socialjustice.nic.in/sclist.php

    இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது போல் சொல்லுவது ஈவெரா மாய‌பிம்ப தூக்குதல். நகரமயமாதல், தொழில்மயமாதல், ஜாதி பேத‌ங்களில் நம்பிக்கை இல்லாத சட்டம், நீதி, அரசாங்கம் ஆகியவைதான் ஜாதி வேறுபாடுகள் குறைந்ததில் அடிப்படை காரணங்கள். அது 150 வருஷங்களாக இந்தியாவில் நடப்பது; எல்லா மாநிலங்களுக்கும் அது பொருந்தும். பக்தகோடிகள் எல்லாம் தங்கள் தலைவரால் ஏற்பட்டது என்ற புனைவு போன்ற ஹாஸ்யம் இல்லை. உதாரனமாக 8 மில்லியன் ஜனத்தொகை உள்ள மெட்ராஸ் எப்படி ஜாதி வேற்றுமையை குறைத்தது என பலர் நேரடியாக பார்த்தவர்கள். (http://www.jeyamohan.in/?p=63812) எல்லாம் ஜாதி நோக்கோடு பார்ப்பது என்ற ஈவேராவின் பழக்கம், தமிழ்நாட்டில் தொத்துநோயாக பரவி ஜாதி பேதங்களை களைவதில் முட்டுக்கட்டையாக உள்ளது. விஜயராகவன்

  16. எல்லாமாநிலத்திலும் அட்டவணை உண்டு.அவற்றில் தமிழகத்தைப்போல முழுமையான பயனாளிகள் இல்லை என்பதே நான் அறிந்த தகவல்..

    வில்லவன் கோதை

    http://verhal.blogspot.in/2014/11/blog-post.html
    விவாதத்துக்கு இந்த பதிவும் பயனளிக்கும்

  17. எது “முழுமையான பயனாளிகள் ” நிலை என்பதை காலமெல்லாம் விவாதிக்கலாம். ஜாதி அடிப்படை ரிசர்வேஷன்கள்தான் ஈவேராவின் முக்கிய பங்களிப்பு என்றால், ஜாதி பேதங்கள், ஜாதி உணர்வ்ய் எழுச்சி, ஜாதி அரசியலின் வளர்ச்சியில் ஈவேராவின் பங்கை மறுக்க முடியாது.

    ஒருவர் தொட்டில் முதல் சாகும் வரை ஜாதி சர்டிபிகெட் அடிப்படையில்தான் கல்வி, உத்யோகம், உத்யோக வளர்ச்சி போன்றவ்ற்ரை பெறுவார் என்பது அரசாங்க கொள்கையானல், அது ஜாதி பேதத்தையும், ஜாதி அரசியலையும் அதிகரிக்கத்தான் செய்யும். அரசாங்க கொள்கைகள் “ஜாதி குருடு” ஆக இருந்தால்தால்தான் ஜாதி உணர்வும் வேறுபாடுகளும் குறையும். ஈவெராவின் போலி பகுத்தறிவு நெல்லை நட்டுவிட்டு, கேழ்வரகு அருவடையை எதிர்பார்ப்பது.

    ஈவெராவின் பங்களிப்புகள் என்ன?
    மேற்சொன்னபடி ஜாதி அரசியலை வளர்ப்பது. அதை மறைப்பதற்க்கு Politics of scapegoating வளர்ப்பது. தமிழர்களின் சரித்திரம், பரம்பரை ஆகியவற்றில் காழ்ப்ப்புகாட்டி, அவர்கள் தன் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் தகர்த்தது.
    பிரித்தானிய காலனீயத்தை ஆதரித்தும், சுதந்திரத்தை எதிர்த்தும் தமிழர்களின் சுய ஆட்சி தகுதியின் மீது அவநம்பிக்கையை வளர்த்தது. மற்றபடி அவருடைய படிப்பு குறைவாக இருந்ததால் தூயதமிழ் இயக்கம், லெமூரியா போன்ற பிற்போக்கு கருத்தாங்களை ஆதரித்தது. இன்னும் ஈ.வெ.ராமாசாமி நாயக்கரை “பெரியார்”, “பகுத்தறிவு பகலவன்” என்ற துதி செய்ய வேம்டுமா; நீங்கள் செய்யலாம்; ஈவெரா எதிர்த்த சுதந்திர இந்தியாவில் , இந்திய குடியரசில் உங்களுக்கு சிந்தனை உரிமை உண்டு.

  18. குறைந்த படிப்புக் கல்வி அறிவு கொண்ட பகுத்தறிவுப் பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்ட மாமேதைகள் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கவிச் சக்ரவர்த்தி கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், ஆண்டாள், பாரதியார் போன்ற இலக்கிய ஞானிகள், கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞான மேதைகள் அனைவரையும் முட்டாள் என்று திட்டியவர்.  

    கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள் என்று திட்டிய பெரியார் இந்த மகத்தான பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று ஒருபோதும் ஆராய்ந்து விளக்கிய தில்லை !!!

    சி. ஜெயபாரதன்  

  19. வெற்றுக்குரல்கள்

    விஜயராகவன் தாங்கட்கு 
    பெரியார் மெத்த படிக்காதவர்தாம் இயல்பாகத்தோன்றிய கருத்துக்களை ஒடுங்கிக்கிடந்த இனத்துக்கு மண்டையில் அடித்துச்சொன்னவர் பெரியார்ஒருவேளை அவர் படித்திருந்தால் அவர் முழங்கிய கருத்துக்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக பேசப்பட்டிருக்கும்.
    உங்களுடைய உரத்த குரலுக்கான காரணத்தை உணருகிறேன். வேறு வழியில்லை இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டியதுதான்.உலகளாவிய ஊழல் கலாச்சாரத்தில் திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்டுவிட்ட ஒரு சரிவு ஒருகாலத்திலும் பெரியார் சிந்தனைகளை தகர்த்து விட முடியாது.
    வணக்கம்.
    வில்லவன் கோதை

  20. 1.  பெரியார் செய்த ஒரே ஒரு சிறப்பான தொண்டு:  சாதி உயர்வு-தாழ்வை நீக்கப் போராடியது.

    2.  அவர் செய்த மகத்தான தீமை:  வெறித்தனமான வெறுப்பை மக்களிடையே ஊட்டி வளர்த்தது.  “பாம்பையும், பாரப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடி” என்றாரே, அப்படிப்பட்ட வெறுப்பை யாரும் மக்களிடையே ஊட்டியதில்லை.  அந்த விஷ வெறுப்பு விதை இன்னும் மக்களின் மனதில் (பெரிய அறிஞர்களாக இருந்தால்கூட) ஆலமரமாக வளர்ந்து நிற்கிறதே!  தாழ்த்தப்பட்டோரைப் பார்த்து இப்படிச் சொன்னால் இந்தியாவில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நான் சொல்லவேண்டாம்.  அவருடைய பல கருத்துக்கள், சொற்பொழிவுகள் அமெரிக்காவில் hate speech என்றுதான் கருதப்பட்டிருக்கும்.

    அவர் செய்த தொண்டை விட்டுவிட்டு, அவர் விதைத்த விஷவிதையைப் போற்றி எழுவது அவர் தொண்டையே அடியோடு தகர்ப்பதாகத்தான் தோன்றுகிறது.

  21. ஈவெரா கருத்துகள் ஒன்றும்கூட ஒரிஜினல் இல்லை; மற்ற இந்திய சிந்தனையாளர்கள் அல்லது இந்திஉஅ மரபிலிருந்து எல்லாம் எடுக்கப்பட்டவை அல்ல. ஈவெரா கருத்துகள் அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலநீய ஆளும் வர்கம் மேலும் ஆங்கில கிருஸ்துவ மத போதகர்களிடம் இருந்து வந்தது . அவர்கள் தங்கள் காலனீய, ஏகதிபத்திய அரசு அதிகாரங்களை ஜஸ்டிபை செய்யவும், தங்கள் ஆட்சிக்கு ஒரு “நல்ல காரணம்~ தேடவும், இந்தியர்கள், இந்து மதம், இந்திய சிந்தனைகள், இந்திய மரபுகள் மீதும் காரித்துப்பினர். ஈவெரா அந்த துப்பல்களை புனிதஜலமாக பாவித்தார். சம்பிளுக்கு ஒன்று கூட ஈவெராவிக்கு ஒரிஜினல் சிந்தனை கிடையாது.
    சிந்தனை தளத்தில் அவருக்கு “இயல்பாக” வந்தது ஈயடிச்சான் காபிதான் . என் எதிர்ப்பு ஈவெரா மீது அல்ல ; ஈவேரா துதி மதம் மீது தான் , அதனால்தான் இந்த பொய் பிம்ப்பத்தை உடைக்க வேண்டியுள்ளது. விஜயராகவன்

  22. அரிசோனன்
    தாங்கட்கு
    பெரியாரின் போராட்ட காலம் வேறு. அவருடைய தெருப்பேச்சு முழுதும் ஒடுக்கப்பட்ட பாமரர்களுக்கானது. அவர்களை அவர்கள் மொழியிலேயே அவர் எச்சரித்தார்  .தன்பேச்சுக்கேற்ற எந்த தண்டனையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
    அரசியல் எதிரணியைச் சார்ந்தவர்களிடமும் பார்பன சமூகத்தோரிடமும் அவர் எத்தனை நாகரீகமாக நடநது கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்ற.அவர் கடைபிடித்த அரசியல் பண்பு இன்று எவரிடமும் கிடைக்காதவை.அவருடைய தலையாய குறிக்கோள் உறங்கிக்கிடக்கும் ஒரு இனத்தை உசுப்பிவிடுவதுதான்.
    பெற்றமகனுக்கு தாயோ தந்தையோ போதிப்பதைப்போலத்தான்.
    வில்லவன் கோதை

  23. விஜயராகவன் தாங்கட்கு
    நீங்கள் நிரம்ப அறிந்திருக்கிறீர்கள்.ஆனால்உங்களுடைய கவலையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக பெற்றிருந்த தலைமைப்பண்பு பறிபோனதைப்பற்றித்தான்.ஒடுக்கப்பட்டுகிடந்த மக்களையும் சேர்த்துக்கொண்டு முன்னேறவேண்டுமென்ற நோக்கமல்ல..உங்களை என் பதில்கள் சமாதானப்படுத்துமென்று தோன்றவில்லை.
    வணக்கம்
    வில்லவன் கோதை

  24. // பார்பன சமூகத்தோரிடமும் அவர் எத்தனை நாகரீகமாக நடநது கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்ற.அவர் கடைபிடித்த அரசியல் பண்பு இன்று எவரிடமும் கிடைக்காதவை.அவருடைய தலையாய குறிக்கோள் உறங்கிக்கிடக்கும் ஒரு இனத்தை உசுப்பிவிடுவதுதான்.//

    உசுப்பிவிட்டதன் விளைவைத்தான் இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறோமே, உயர்திரு வில்லவன் கோதை அவர்களே!  இன்றுமா பெரியாரின் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது?  வரிக்குவரி ஒரு சமூகத்தைத் தாக்கித்தானே கட்டுரைகள் எழுதப் படுகின்றன!  வல்லமையே “எங்களுக்குப் பொறுப்பல்ல!”  என்னும் அளவுக்குத்தானே எழுதப்படுகின்றன! 

    காழ்ப்புணர்ச்சியைப் பெரியாரின் சீடர்கள் என்று விடுகிறார்களோ, அன்றுதான் பெரியாரின் சமூக நீதி ஒற்றுமை சிறக்கும்.  அதுவரை, இப்படிப்பட்ட எதிர்மொழிகள்தான் பதிவு செய்யப்படும்.  அவரது சீர்திருத்தங்கள் மறந்துபோகும்.  
    சீடர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?

  25. திரு வில்லவன்கோதை

    நீங்கள் கண்ணியமானவர், ஆனால் ஒரு ஆளுமையைப் பற்றி நாம் வேறுபடுகிறோம். அதனால் ஈவெராவைப் பற்றி நாம் மாற்றுகருத்துக்கு உடன்படுவோம்.

    (agree to disagree) நம் தீவிர அபிப்பிராயங்கள் வாதத்தால் மாறுவதல்ல. விஜயராகவன்

  26. அன்பார்ந்த அரிசோன்னுக்கு
    வல்லமைக்கட்டுரையின் உள்ளடக்கத்திற்காகவோ உரைநடைக்காக வாதிடிவில்லை. உங்களைப்போல பின்னூட்டங்களை தொடர்ந்து மட்டுமே பேசுகிறேன். 
    நண்பர் விஜயராகவன் இறுதியாகச்சொன்னதைத்தான் நானும் குறிப்பிட்டேன் .வணக்கம்.

  27. பெரியார் அவரது வாழ்க்கையில் முதலில் பெண்களை மதித்து வாழவில்லை.பின்னர்தான் ஒவ்வொன்றாகத் தெளிந்து  பெண் குறித்த முன்னேற்ற கருத்துகளைக் கொணர்ந்தார்.எப்பேர்ப்பட்ட மாமலையையும் வீழ்த்தும் எறும்பினம்.அத்தகையது பெண்ணினம் என ஆண்டாண்டு காலமாக ஆண்களால் இழிவுபடுத்தப்பட்டுவருகிறது. காரணம் பெண் வளர்ச்சி பிடிக்காதிருத்தல்,சம உரிமை அளிக்காதிருத்தல். இதைச் சொல்வதற்கு கட்சி தேவையில்லை. படித்தறிந்த அனைவருக்குமே இது புரியும். ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒவ்வொரு கொள்கைகளை வைத்திருந்தனர். அதில் எது பிடிக்கிறதோ அதை எடுத்து வேண்டாததைத் தள்ள வேண்டும். அந்தக் காலத்தில் பிராமணர் உயர்வு இருந்திருக்கலாம். இன்று இருக்கிறதா? எல்லாமே மாறிப் போய் இருக்கும் காலத்தில் சாதி ஏன் வர வேண்டும்? ஆணும், பெண்ணும் சரி சமம். மனிதனாய் பிறந்த எவரும் இந்த உலகத்தில் எதையும் கொண்டு போகப் போவது கிடையாது.ஒரு நில அதிர்வு வந்தால் என் சாதி,என் ஊர்,என் நாடு எனப் பேசுவோமா? மண்ணுக்குள் போகிறவனைக் கையைப் பிடித்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மாட்டோமா? அதைப்போல மனிதன் எப்போதும் வாழப்பழக வேண்டும். அவர்கள் காலத்தில் அதெல்லாம் இருந்தது.பெரியார் திருமணம் செய்து கொண்டார்.(அவர் விருப்பம்) பொதுவில் அதை நாம் இப்போது அதைப்பேசினால் என்ன பதில் வரும் என்று எல்லோருக்குமே தெரியும். பழையதைக் களைந்து புதிய நெல் விதைத்து தீய எண்ணமில்லாத சமுதாயம் உருவானால் சரி. இல்லையா? 

  28. உயர்திரு வில்லவன்கோதை அவர்களே,

    தங்களது பின்னூட்டங்களில் தங்கள் கண்ணியம் தெரிகிறது.  எனவே உயர்திரு விஜயராகவன் அவர்கள் பதிந்ததையே நானும் மறுபதிவு செய்கிறேன்.

    //நீங்கள் கண்ணியமானவர், ஆனால் ஒரு ஆளுமையைப் பற்றி நாம் வேறுபடுகிறோம். அதனால் ஈவெராவைப் பற்றி நாம் மாற்றுக்கருத்துக்கு உடன்படுவோம்.
    (agree to disagree) நம் தீவிர அபிப்பிராயங்கள் வாதத்தால் மாறுவதல்ல.//

    நாம் தமிழால் ஒன்றாக இணைகிறோம்.  அதைவைத்து நமது ஒத்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம்.

    வணக்கம்.
    ஒரு அரிசோனன்

  29. அன்பார்ந்த லட்சுமி அம்மாவுக்கு

    இங்கே பேசப்பட்ட பெரியார்  மணம்.
    பெரியாரின் வயது முதிர்ந்த காலத்தில் வேலூரைச்சேர்ந்த தொண்டரின் பெண் தந்தை பெரியாருக்கு தானாக முன் வந்து பணிசெய்தார். அவர்தான் மணியம்மை
    அவர் தோற்றிவித்த  கழகம் அவரே எதிர்பாராமல் அபரிதமான வளர்ச்சி பெற்று சொத்துக்களும் அதிகமாயிற்று.காசு விஷயத்தில் கறாறான பெரியார் கழகத்தின் பிற்காலம் பற்றி குழப்பமடைந்தார்.அண்ணாவின் பிரிவின்மூலம் அவர் எண்ணியிருந்த வாரிசு சம்பத் இல்லையென்றாயிற்று.
    அவரதுஅரசியல் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் கொண்டவரும் நெருக்கமான நண்பருமான மூதறிஞர் ராஜாஜின் ஆலோசனைப்படி மணியம்மையை அவர் மணக்க நேரிட்டது. 
    இது கழகத்தின் சொத்துகளுக்கு பாதுகாப்புக்கான ஒரு ஏற்பாடே தவிற வேறொன்றுமல்ல என்று அன்றே சொன்னவர் பெரியார்.
    அண்ணா திராவிடக்கழகத்தை விட்டு பிரிந்ததற்கு தலையாய காரணம் இந்த திருமணம் அல்ல. ஆனால் அப்படித்தான் சொல்லப்பட்டது.
    தமிழகத்தைப்பொருத்தமட்டில் பெண்ணடிமைக்காக குரல் கொடுத்தவர்களுள் முதன்மையானவர் தந்தை பெரியார் 
     அந்தக் காலத்தில் பிராமணர் உயர்வு இருந்திருக்கலாம். இன்று இருக்கிறதா? எல்லாமே மாறிப் போய் இருக்கும் காலத்தில் . . 
    இருக்கலாம் அல்ல இருந்தது. 
    என் கடந்த காலங்களில் இவற்றையெல்லாம் கண்கூடாக கண்டவன்.நீங்கள் குறிப்பிட்ட இந்த மாற்றங்கள்  நிகழ்ந்துதான் இருக்கிறது  இந்த மாற்றங்களுக்கு தமிழ் மண்ணில் பெரியார்தான் காரணமென்கிறோம். 
    இந்த மண்ணில்  சாதியும் மதமும் ஆன்மீகத்தோடு ஒன்றில் ஒன்று பின்னிக்கிடக்கிறதென்றார் பெரியார். சாதி ஒழிய இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்
    வில்லவன் கோதை

  30. நாட்டில் இப்போது ஜாதி வேறுபாடு பார்ப்பதில்லை என்பவர்கள் இன்றைய இந்து இதழில் வெளிவந்துள்ள சர்வேயைப் பார்க்கவும்.

    Just 5% of Indian marriages are inter-caste: survey

    AP Inter-caste marriages were rarest in Madhya Pradesh (under 1 per cent) and most common in Gujarat and Bihar (over 11 per cent).
    TOPICS
    social issue
    Just five per cent of Indians said they had married a person from a different caste, says the first direct estimate of inter-caste marriages in India.
    The India Human Development Survey (IHDS), conducted by the National Council for Applied Economic Research (NCAER) and the University of Maryland, also reported that 30 per cent of rural and 20 per cent of urban households said they practised untouchability. The IHDS is the largest non-government, pan-Indian household survey. It covers over 42,000 households, representative by class and social group. Its findings, yet to be made public, were shared exclusively with The Hindu. When married women aged between 15 and 49 were asked if theirs was an inter-caste marriage, just 5.4 per cent said yes, the proportion being marginally higher for urban over rural India.
    There was no change in this proportion from the previous round of the IHDS (2004-05). Inter-caste marriages were rarest in Madhya Pradesh (under 1 per cent) and most common in Gujarat and Bihar (over 11 per cent).
    Survey finds practice of untouchability
    The India Human Development Survey said what female respondents interpreted as a “different caste” is likely to have been subjective, but ultimately closer to the lived reality of an inter-caste marriage.
    “Questions on caste are some of the most complex questions Indian surveys can ask. The same person will say ‘I am Baniya’ today and say ‘I am Modh Banik’ tomorrow; both would be correct,” Sonalde Desai, a demographer who is Senior Fellow at NCAER and Professor of Sociology at the University of Maryland, who led the IHDS-II, told The Hindu.
    “So the IHDS took a simple approach and asked women whether their natal family belongs to the same caste as their husband’s family, allowing us to bypass the complex issue of defining what caste means and get subjective percept-ions from our respondents,” Dr. Desai said.
    The NCAER survey also asked respondents if they practised untouchability, following it up with a question on whether the respondent would allow a lower caste person to enter their kitchen or use their utensils.
    A third of rural respondents and a fifth of urban respondents admitted to practising untouchability. The practice was most common among Brahmins (62 per cent in rural India, 39 per cent in urban), followed by Other Backward Classes (OBCs) and then non-Brahmin forward castes.
    The only other estimate on the extent of inter-caste marriage came from an indirect method. Comparing the answers that the husbands and wives of the same household gave to the National Family Health Survey, researchers Kumudini Das, K.C. Das, T.K. Roy and P.K. Tripathy found that 11 per cent of couples in the 2005-06 NFHS stated different caste groups.
    “This was an indirect way of estimating the extent of inter-caste marriages. We cannot say if it was accurate, but it was a way to approach the truth,” Dr. K.C. Das, Professor in the Department of Migration and Urban Studies at the Mumbai-based International Institute of Population Sciences (IIPS), explained to The Hindu.

    முழுச் செய்திக்கு:

    http://www.thehindu.com/data/just-5-per-cent-of-indian-marriages-are-intercaste/article6591502.ece?homepage=true

  31. “இது (மணியம்மை மணம்) கழகத்தின் சொத்துகளுக்கு பாதுகாப்புக்கான ஒரு ஏற்பாடே தவிற வேறொன்றுமல்ல என்று அன்றே சொன்னவர் பெரியார்.” தன் கட்சி விவகாரங்களுக்காக ஒரு இளம்பெண்ணின் வாழ்வை பிணையாக விளையாடுவதா பகுத்தறிவு ?? . அது அகங்காரத்தின் உச்சி அல்லவா? . மணம் ஒரு மனங்களின் காதல் அடிப்படை ஐக்கியம் என்றுதான் தற்காலத்தில் பார்க்கின்ரனர்; ஆனால் ஈவேராவிக்கு தன் கட்சி எதிர்காலத்தை கருதி ஒரு இள‌ம்பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவது “சாதாரணமாக” பார்ப்பது, சரியாக இல்லை. ஈவேரா தன் மண‌த்தை ஒரு பிசினஸ் விவகாரமாக பார்த்தது அவருடையை ஆளுமையை இன்னும் ஒரு படி கீழே தள்ளுகிரது. நான் அவர்களின் வயது வேற்றுமையை பற்றி விமர்சிக்க வில்லை – ஈவேராவே அதை கண்டித்திருந்தாலும் ; ஆனால் இளம்பெண்ணின் வாழ்க்கையை ஒரு Instrument ஆக‌ பாவிப்பது, மனிதாபிமான செயல் இல்லை.

  32. பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலே !

    Why untouchability makes Tamil Nadu the most lopsided state !

    http://www.firstpost.com/india/why-untouchability-makes-tamil-nadu-the-most-lopsided-state-368799.html

    Chennai: A Hindu caste group preventing their children from attending classes at a local school in southern Tamil Nadu because two Dalit women were posted to prepare the noon-meals has sent shockwaves through the state.
    More shocking was the response of the school and district administration, which transferred the women out of the school to mollify the community and bring the children back.

    A Hindu group refused to send their children to a school with Dalit cooks. Representative image. Reuters.
    So far, neither the political leaders and Dalit activists nor the State government have raised the slightest protest, let alone fought for any corrective action.
    The incident happened in a panchayat union school at Kammappatti near Rajapalayam in Virudhu Nagar district on Tuesday. As soon as the leaders of the community, Kambalath Naicker, came to know about the posting of the Dalit women, they told the school authorities that they would not send their children if Dalits cooked the noon-meal.
    The community leaders justified their action on cultural grounds, that they don’t eat food cooked by people from other castes, although it was a clear practice of untouchability and discrimination.
    “We are not against any particular caste. We maintain cordial relationship with the scheduled caste people. But, it is our practice that our people, especially girls and women, do not eat food cooked by people belonging to any other community,”  The Hindu quoted B Sanjeevi, ward member of the Kammapatti panchayat.
    The district revenue officer, who is holding the charge of additional collector reportedly echoed the voices of the community leaders and justified the transfer of the Dalit women. “This is a peculiar habit of this community. We cannot treat this as a practice of untouchability,” according to the same report.
    Caste-discrimination is always justified or camouflaged as a cultural practice. The motion on the Prevention of Atrocities Bill, which subsequently became an Act, in the Parliament in 1995, had in fact clearly said that “serious atrocities are committed against them (scheduled castes) for various historical, social and economic reasons.”
    What the community leaders, the school authorities and the local administration are doing is no different. In fact, the Prevention of Atrocities Act (POA) was passed mainly because of the inadequacies of existing laws to address the atrocities committed against Dalits.
    Noted writer and commentator  Gnani Sankaran said the Kammapatti incident was “ridiculous and unconstitutional”. Any caste can discriminate others using such behaviour, he said. This is nothing but untouchability and untouchability is caste-based, he said.
    According to him, this also shows the lop-sided development of Tamil Nadu. One part of the state is progressing quite fast, while the other is steeped in archaic practices. “The government should be stern and take punitive action against the village if they are found to be guilty. The district administration should not have yielded to their discriminatory demands for the transfer of the Dalit staff.”
    A senior professor at the Chennai Medical College said that strict action should be taken against the school authorities and district administration for their callous act of transferring the women out of the school because the community that practised discrimination couldn’t stand them. The state government has time and again said that they are committed to the Protection of Civil Rights Act and the POA.
    Despite the remarkable progress in human development indicators and women’s rights, the state has a horrendous record in preventing the oppression and discrimination of Dalits. Discrimination and violence against them by caste Hindus is rampant in southern districts and also in many other parts of the state.
    Dalit villagers are routinely ostracised by caste Hindus, which included denial of rights of passage,  use of common public utilities and even simple lifestyle practices such as wearing footwear. A Tamil magazine recently reported how Dalit children had to hold their footwear by hand while passing by a caste Hindu village in Coimbatore.
    It’s contrasting indeed that such archaic human rights violations happen in a state that has stated to be committed to the well-being of scheduled castes and tribes.
    The Tamil Nadu government, in its policy on (Adi Dravidar and Tribal Welfare Department) claims that “sustainable development of scheduled castes/scheduled tribes is its prime objective.” Besides a series of welfare measures, the policy also lists the various steps taken by the government to implement both the PCR Act and the POA.
    “Under Rule 17(1), of SC/ST (Prevention of Atrocities) Rules 1995, the State Government have constituted District Level Vigilance and Monitoring Committee in each district headed by the concerned District Collector with officials / non-officials as members. The District Collectors are also empowered to nominate a person who has the right aptitude and understanding of the problems of SC/ST as a member in the committee.”
    If this were true and effective, there is something seriously wrong with the way the government policy is implemented. The same authorities who are entrusted with the protection of SC/ST are party to the discrimination witnessed in Kammapatti.
    The policy further states: “the District Level Committee shall meet at least once in three months to review the implementation of the provisions of these Acts and monitor the relief and rehabilitation measures provided to the victims.”
    In addition, the state has a High Power Vigilance and Monitoring Committee chaired the chief minister to review and monitor implementation of the SC/ST Acts in the State.
    The state government has also set up a Social Justice and Human Rights wing under the Additional Director General of Police to supervise registration, investigation and filing of cases under these two Acts and to act as a protection cell for scheduled castes and scheduled tribes.
    So much on paper for SC/ST, but in reality, a community conclave can call the shots and banish people out of their sight. If the government is serious about its commitment, it should suo moto take cognizance of the Kammapatti incident and order an investigation.
    Clearly the issue is not of safeguards and institutions to guard the constitutional guarantees, but severe lack of political commitment. Dalits are easy targets of discrimination of caste Hindus in the state and often the latter get away easily because of their political influence. There is no action against leaders who often practice anti-Dalit caste-based politics.
    According to the 2011 census, 19% of the people in the state belong to Scheduled Castes and 1.04%, Scheduled Tribes.  The state has the fifth largest Dalit population in the country.
    It’s regrettable that in a democracy, such a large population of people are still vulnerable to outrageous practice of discrimination and violence. The Kammappatti incident is yet another istance of the conflict between constitutional guarantees and the lack of political commitment.

    Thanks to Mrs. T. Subashini

  33. Dear Jayabharathan,

    Periyar advocated Brahmin hatred in addition to caste destruction.  His followers, when they come across any caste discrimination against Dalits, conveniently blame the Brahmins, instead of directing their attention to the real issues.

    It is one Naicker, the same caste as Periyar is perpectuating the discrimination against Dalits.  Now you know why everybody is keeping quiet.  If the person who discriminated were a Brahmin, the whole Tamilnadu would be up again that caste in arms.

  34. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற போலி பகுத்தறிவாளர், போலி சமூகசீர்திருத்தவாதியின் விளைவுகள் இன்று நன்றாக தெரிகின்றன. எல்லா இந்திய மாகாணங்களில் நடக்கும் ஜாதி கலப்பு புள்ளி விவரங்கள் , தமிழ்நாட்டில் மிகக்குறைவான ஜாதி கலப்பு மணங்கள் இருப்பதாக ருஜு செய்கிறன.

    http://www.newindianexpress.com/states/tamil_nadu/Just-3-Percentage-in-Tamil-Nadu-Opt-for-Inter-caste-Marriage-Study/2015/04/23/article2778083.ece

    தமிழ்நாட்டில் 97.1% மணங்கள் ஒரே ஜாதிக்குள் நடப்பவை. ஜாதிகலப்பு மணங்கள் 3%க்கும் குறைவு, இது தென் இந்தியாவில் அடிமட்டம்.

    இந்த புள்ளிவிவரத்திலும் இன்னொரு ஷாகிங் புள்ளிவிவரம். கேரளாவில் “கீழ்ஜாதி” ஆண்களை மணக்கும் “மேல்ஜாதி” பெண்கள் 12.24 சத‌விகிதம். தமிழ்நாட்டில் இது 1.66%.   எனக்கு “மேல்” அல்லது “கீழ்”  ஜாதிகள்  என்ற பாகுபாட்டின் மீது நம்பிக்கையில்லை, அதனால் அவை பிராகெட்டின் உள்ளே , ஆனால் ஈவெரா சீடர்கள் வர்ப்புருத்தலில் இதைப்போல் அரசு சார்ந்த பாகுபாடுகள் உள்ளன. இப்படிப்பட்ட பாகுபாடுகளே ஈவெராவின் போலித்தனத்தை காட்டுகிறது

    போதுமா , “பெரியார் பிறந்த பூமி”| என்ற மாயையின் வண்டவாளம். ஈ.வெ.ரா.நா. வின் துதி தமிழர்களை உணர்சிகர கோஷங்களில் வைத்து , பிந்தங்கிய மக்களாக வைக்கிறது, வைக்கும்.

    “பெரியார் பிறந்த பூமி” யில்  பகுத்தறிவு , பகுத்தறிவு பாசரை –  இதைப்போல் ஜோக்குகள் உலகம் எங்கேயும் இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே மாணவர்கள் விஞ்ஞானத்தை கற்கின்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ்ர்கள் லெமூரியர்கள் என படிக்கின்றனர், தமிழர்கள் தமிழ் மற்ற மொழிகளுக்கு “தாய்” என படிக்கின்றனர்.  ஈ.வெ.ரா. துதி –  இந்த கட்டுரை ஆசியர் செய்வது போல்- தமிழர்களை இன்னும் கெடுக்கும்.

    “பெரியார்”  பிம்பத்தை குப்பையில் போடாமல் தமிழ்நாடு இம்மியும் முன்னேறாது. 

    வ.கொ.விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *